Dark Mode Light Mode

Aavaram poo benefits for hair in tamil

Aavaram poo benefits for hair in tamil “இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் !” வணக்கம் நண்பர்களே , இந்த பதிவில் நாம் ஆவாரம் பூவின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே ஆவாரம் பூவானது உடலின் அனைத்து பிரச்சினைகளை தீர்வாக இருக்கிறது. மாதவிடாய் கோளாறுகள் , சர்க்கரை நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வாக இல்லாமல் தலை முடி வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது ஒரு காய கல்ப மூலிகை

என்பது சித்தர்களின் வாக்கு சொன்னது.

ஆவாரம் பூவின் நன்மைகள்:-

  • ஆவாரம் பூ தலை முடிக்கு சிறந்த போஷாக்கை அளிக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு முடி அதிகமாக இருந்தாலே ஒரு அழகு தான். பெண் என்றாலே அதிக கூந்தல் வளர்ச்சி இருந்தால் அதுவே அந்த பெண்ணுக்கு தனிச்சிறப்பை தரும்.
  • ஆவரம் பூ பொடியானது தலை முடிக்கு சிறந்த போஷாக்கை தருகிறது.
    முடியின் வேருக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது. சிறந்த வலுவூட்டத்தை கொடுத்து கூந்தலை பொலிவூற செய்கிறது
  • ஆவாரம் பூ பொடியை தலைக்கு தேய்த்து குளிக்கும் போது தலையில் பொடுகு தொல்லை குறையும்.
  • வேர்வை தொல்லையால் தலைமுடியில் வரக்கூடிய நாற்றத்தை சரி செய்து கூந்தலுக்கு நல்ல மனத்தை தருகிறது.
  • ஆவாரம் பூவானது சூரிய வெளிச்சத்தால் வரக்கூடிய தூசிகளில் இருந்து கூந்தலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
  • தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கும் , நீளமாக வளருவதற்கும் முடியின் வேர் வரை சென்று அவற்றுக்கு வலுவூட்டதை கொடுக்கிறது.
  • ஆவாரம் பொடியை தலைக்கு தேய்த்து குளிப்பதனால் உடல் சூடு தனித்து உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.
  • ஆவாரம் பூ பொடியை காலையில் எழுந்தவுடன் அதனை நீரில் கலந்து குடிப்பதன் மூலமும் நன்மை ஏற்படும்.

 

Advertisement

ஆவாரம் பூ + ஆலிவ் ஆயில் :-

  • ஆவாரம் பூவை காயவைத்து அதனை ஆலிவ் ஆயிலில் நன்கு சூடுபடுத்தி பின்பு அந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமில்லாமல் முகத்திற்கும் அதனை பயன்படுத்தி பொலிவான தோற்றத்தை பெறலாம்.
Previous Post

எருக்கன் செடி பயன்

Next Post

panang kilangu benefits in tamil

Advertisement
Exit mobile version