திரைப்படம் – வணங்காமுடி நடிப்பு – அரவிந்த் சுவாமி, ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன் இசை – டி. இமான் செல்வா இயக்கியுள்ளார் ஒளிப்பதிவு – கோகுல் அந்தோனி திருத்தினார் ஸ்டண்ட் – சில்வா தயாரிப்பாளர் – கணேஷ் ரவிச்சந்திரன் பேனர் – மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு இசை லேபிள் – சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்
Author: Pradeepa
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் திருவுருவப் படத் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக வருகை தந்து விழா பேருரையாறுகிறார் மாண்புமிகு குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த். விழாவிற்கு தலைமை வகித்து தலைமை உரையாற்றுகிறார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித். முன்னிலை வகித்து சிறப்பு உறையற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு வரவேற்புரையாற்றுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா இன்று நடைபெறுகிறது.
ஜெய் பீம் என்ற சக்திவாய்ந்த முழக்கத்தை பெயராக கொண்டுள்ள இந்த படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஜெய் பீம் படம் உண்மை கதை ஒன்றை தழுவி எடுக்கப்படுவதாக இயக்குனர்தான் தா.சே.ஞானவேல் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். மனித உரிமைகளுக்காக போராடும் போராளியாக வழக்கறிஞர் சந்துரு எடுத்துக்கொண்ட வழக்கு ஒன்றை தழுவியே ஜெய் பீம் கதை உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பொய் வழக்கில் சிக்க வைக்கபட்ட கடலூர் மாவட்டத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விசாரணை கைதியாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அவரது மரணத்திற்கு நீதி கேட்க யாரிடம் செல்வது என்றுகூட அறியாத பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் 1993ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆக இருந்த சந்துருவை சந்தித்து முறையிடுகின்றனர். அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் பழங்குடியின பெண்ணுக்காக சட்டத்தை ஆயுதமாக கையில் எடுக்கிறார் சந்துரு.…
பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆகஸ்ட் 2 ஆம் தேதி) மாலை 4:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண முறையான e-RUPI ஐ அறிமுகபடுத்த உள்ளார். e-RUPI என்பது பணமில்லாத மற்றும் தொடர்பற்ற கருவியாகும். இது ஒரு க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான இ-வவுச்சர் ஆகும், இது பயனாளிகளின் மொபைலுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடையற்ற ஒரு முறை பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துபவர்கள் அட்டை, டிஜிட்டல் பணம் செலுத்தும் பயன்பாடு அல்லது இணைய வங்கி அணுகல் இல்லாமல் வவுச்சரை பெற முடியும். இது National Payments Corporation of India நிறுவனத்தால் அதன் UPI தளத்தில் நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. முன்கூட்டியே பணம் செலுத்துவதால், எந்த இடைத்தரகரும் ஈடுபடாமல் சேவை வழங்குநருக்கு சரியான நேரத்தில் பணம்…
ஒலிம்பிக்கில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த தொடரின் B-பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால் A-பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவும் 4-ஆம் இடத்தைப் பிடித்து கால் இறுதியை எட்டியது. டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற விறுவிறுப்பானஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த பேனலிட்டி கார்னர் வாய்ப்பை இந்திய மகளிர் அணி பயன்படுத்திக் கொண்டது. அந்த வாய்ப்பை விரயம் செய்யாமல் போலாக்கி ரசிகர்களையும் அதிர்ச்சி கடலில் மூழ்கடித்தார். உலக தரவரிசையில் 2வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி…
பாடல் தலைப்பு- மறவாதே என்றும் எந்தன் மனமே பாடகர்கள்- சாம் விஷால் கூடுதல் குரல், பாடல்கள் மற்றும் அமைப்பு- சம்யுக்தா.வி தயாரிப்பு- ஜெயஸ்ரீ வைத்தியநாதன் படப்பிடிப்பு-அஜய் விஜயேந்திரன் Valued Gestur -யதீஸ்வர் ராஜா .K நடிப்பு யோகா, ஆஷி, தனு, ஜா, விஷ்ணு, ஆமி மற்றும் அது நண்பர்களாக -வாய்ஸ் ஸ்டோர், விஷ்ணு ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது இசை லேபிள் – சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட். லிமிடெட்
பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைக்கவேண்டும் என அமைச்சர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையுடன் வேளாண் நிதி நிலை அறிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளது. விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் உடன் கலந்து ஆலோசித்து வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். விவசாயம் செழிக்க விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பயன்களை பெரும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார். பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள் அனைத்து தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், வர்த்தக மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியவர்களுடன் ஆலோசித்து பொது நிதிநிலை அறிக்கையை தயாரிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டு…
9 கதைகள், 9 உணர்ச்சிகள் மற்றும் ஒரு நம்பமுடியாத பயணம். தயாரிப்பு – மணி ரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன் AP இன்டர்நேஷனல் ஆடியோ லேபிள் – திங்க் மியூசிக் விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா டிரெய்லர் திருத்து – தீபக் போஜ்ராஜ் இசை – கோவிந்த் வசந்தா ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை – தபஸ் நாயக் ஆன்லைன் மற்றும் பிந்தைய தயாரிப்பு மேற்பார்வையாளர் – பாலாஜி கோபால் வசன வரிகள் – ரெக்ஸ் AP இன்டர்நேஷனலில் அளவீடு செய்யப்பட்டது நிர்வாக தயாரிப்பாளர்கள் – சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியூஸ், அதிதி ரவீந்திரநாத் நவராசா ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் இல் மட்டுமே திரையிடப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா என்ற பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பாடல் – வென்று வா வீரர்களே இசை – யுவன் சங்கர் ராஜா
கொரோனாவின் வேற்று உருவான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரண்டும் பரவலை ஒடுக்கி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் இதனை அறியாமல் நாடுகள் தற்போது தளர்வுகளை அறிவித்து வருவதாகவும், பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் உருவான டெல்டா உருமாற்றம் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உடல் நிலை பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அவர்கள் மூலம் எளிதாக பரவி விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை தாக்கும் வலிமை தற்போது கூடுதல் ஆற்றலும் வேகமும் பெற்றுள்ள டெல்டா வைரஸக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தான் மரணத்தில் இருந்து மக்களை பாதுகாக்கிறது என்றாலும் அவர்கள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் டெல்டா பரவி வருவது தெரியவந்துள்ளது. எனவே முக கவசம் மிக முக்கியம் என்பது அரசுகளின் கண்டிப்பாகும்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு பதக்கத்துடன் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் அவரது பயிற்சியாளர் விஜய் சர்மா உடன் இருந்தார். அப்போது விமான நிலையத்திற்கு வந்த விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர். மீராபாய் சானுவுக்கு RTPCR கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேட்டியளித்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக பயிற்சி எடுத்து வந்ததாக குறிப்பிட்டார். டோக்கியோவில் போட்டி கடுமையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே மீராபாய் சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளதோடு மாநில காவல்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. பளு தூக்குதலில் 2000 ஆண்டு சிர்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற…
B.E, B.TECH உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்க்கான பணிகளை தொழிநுட்ப கல்வி கழகம் துவங்கியுள்ளது. B.E, B.TECH பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று முதல் https://www.tneaonline.org/ அல்லது http://www.tndte.gov.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க உதவி செய்வதற்க்காக பொறியியல் கல்லூரிகளிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 25 ஆம் தேதி random எண்ணையும், செப்டம்பர் 4 ஆம் தேதி தரவரிசை பட்டியலையும் வெளியிடுவதற்கு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 7 ஆம் தேதியும், பொது கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதியும் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் வழியே நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில்…
ஐ.ஐ.டி மெட்ராஸ் பல்வேறு பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 04-Aug-2021 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அமைப்பு பெயர் Indian Institute of Technology Madras (IIT Madras) பணி மேலாளர் மொத்த காலியிடங்கள் Various சம்பளம் ரூ. 50,000 – 70,000 / per month பணி இடம் சென்னை-தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://icandsr.iitm.ac.in/recruitment/ கல்வித் தகுதி BBA /B.com, முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் விண்ணப்ப கட்டணம் இல்லை தேர்வு செயல்முறை ஆவண சரிபார்ப்பு /எழுத்து தேர்வு/நேர்முக தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி 04-Aug-2021 மேலும் விவரங்களுக்கு அறிய https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/07/IIT-Madras-Manager-Purchase-Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவருடைய மகள் சாதனா. இவர் இந்த ஆண்டுதான் 12ஆம் வகுப்பை முடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிக்காக நல்ல பயிற்சி மேற்கொண்டால் 19 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு சாதனா தேர்வாகியுள்ளார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாதனா ராமேஸ்வரத்தில் கிரிக்கெட் மைதானம் இல்லாத போதிலும் பயிற்சியாளர் முயற்சியால் ராமநாதபுரம் சென்று சிறப்பான பயிற்சி பெற்றதாக கூறியிருக்கிறார். அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற சிறப்பாக பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக சாதனா தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 17 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சாதனாவுக்கு 17 வயதாகிறது.
