- உலகிலேயே அதிக விலை உயர்ந்த காய்கறி வகையில் ஒன்றை பிஹார் விவசாயி ஒருவர் உற்பத்தி செய்து அசத்தியுள்ளார்.
- பிஹார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், கராம்நித் கிராமத்தில் அம்ரேஷ் சிங் வயது (38) என்பவர் வசித்து வருகிறார்.
- விவசாயி ஆன இவர், வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறி வகையின் விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
- தற்போது அவர் உற்பத்தி செய்யும் ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறியின் விலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.
- இந்த வகை பயிரின் அனைத்து பாகங்களும் பயன் உள்ளதாக இருக்கிறது என கூறப்படுகிறது. இது கனாபசீ குடும்ப வகையைச் சார்ந்தது.
- மேலும் இதில் இருக்கும் தண்டு, மலர், காய் மற்றும் கனி ஆகிய அனைத்து பொருட்களும் பயனுள்ளதாக இருப்பதால் இத்தகைய முக்கியத்தும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
- மேலும் இது பீர் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
- காசநோய்க்கு இது இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. கூடவே தோல் பளபளப்பு தருவதாகவும், கவலை, சோர்வு, இன்சோம்னியா, மன அழுத்தம் போன்றவற்றிக்கு நல்ல மருந்தாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
- இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு கூறும்போது, “கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்கும் ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறி, இந்திய விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்” என்கிறார்.
- இப்போது இந்தியாவில் இந்த காய்கறி தேவையின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
- ஆனாலும் அதிக வருமானம் தரும் ஹாப் ஷூட்ஸ் விவசாயிகளுக்கு நம்பிக்கை தருவதாக கூறிப்பிடபடுகிறது.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

