ஹைலைட்ஸ்:

  • கொரோனவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவரும் இந்திய.
  • ஆக்சிஜன் இன்றி திணறி கொண்டு இருக்கும் இந்திய.
  • பிரிட்டன் பிராதமர் போரிஸ் ஜாக்சன்,இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனம்,வெண்டிலெட்டர்கள் போன்ற 600 வகையான மருத்துவ உபயோக சாதனைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸால் கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு சரியான சுவாசமின்மை காரணமாக பலியாகி வருகின்றனர்.வைரஸ் அதிகமாக பரவி வருவதால் பெருபாலான நாடுகளில் மக்கள் உயிரிழந்து வரும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் இடத்தட்டுப்பாடு,போதிய கண்காணிப்பு இன்மை,ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கபடுகின்றனர்.

பல்வேறு நாடுகளுடன் இந்திய நல்லமுறையில் நட்பு வைத்துக்கொள்வதால்,வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நமக்கு ஒரு சில நாடுகள் தானாக முன்வந்து உதவவுள்ளனர்.

அந்த வரிசையில் பிரிட்டன் பிராதமர் போரிஸ் ஜாக்சன், இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனம்,வெண்டிலெட்டர்கள் போன்ற 600 வகையான மருத்துவ உபயோக சாதனைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ஒரு சிறந்த நட்பு நாடு என்றும், இந்தியாவில் நிலவிவரும் இந்த கொரோனா வைரஸ் போராட்டத்திற்கு பிரிட்டன் அரசு தடுமாறும்போது துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுடன் பேச்சிவார்த்தைகள் நடத்தி அவ்வப்போது தேவையான உதவிகளை வழங்குவோம் என்றும் போரிஸ் ஜாக்சன் தெரிவித்துள்ளார்

See also  தமிழ்நாட்டு நதிகள்-நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள்