Dark Mode Light Mode

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

இன்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.

கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இந்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அவையில் தாக்கல் செய்கிறார் .

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகித பயன்பாடு இல்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது .

இதற்காக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கை கணினி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போது அதில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் கணினியில் தெரியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இன்று பொது நிதிநிலை அறிக்கையும் நாளை வேளாண்துறை கால தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான விவாதங்கள் வருகிற திங்கட்கிழமை முதல் நடைபெறுகிறது

Previous Post

கொரோனா சிகிச்சை கட்டண முறையில் மாற்றம்

Next Post

கொத்தவரங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!!

Advertisement
Exit mobile version