2 முதல் 18 வரை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு தரிப்பில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது உள்ள நிலவரப்படி 18 வயதிற்கு மேல் உள்ள 17.72 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பாரத பயோடெக் நிறுவனம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

testing vaccine

இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள செய்தி குறிப்பில் 2 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழகியுள்ளது.

பாரத பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழு முதற்கட்டமாக 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை’செய்ய உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால் 2 வயது முதல் 18 வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…