ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் புத்தக விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தோய்வு இன்றி நடைபெறலாம். ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று நிர்வாக பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்தயாரிப்பு பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடலாம். 50 சதவீத மாணவர்களுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து, ITI உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதுசேரி நீங்கலாகநீங்கலாக மற்ற மாநிலங்களுக்கான போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது. தியேட்டர்கள், பார்கள், திறக்கவும் பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், கலாச்சார நிகழ்வுகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கான தடை நீட்டிக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 50 சதவீதம் பேரும், இறுதி சடங்கில் 20 சதவீத பேரும் பங்கேற்க்கலாம். இதை தவிர ஏற்கனவே அனுதிக்கப்பட்ட செயல்பாடுகள் எந்த வித மற்றம் இன்றி தொடரும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் செல்வது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது என கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…