கல்விக்கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு டி.சி வழங்க மறுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்விக்கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணத்தால் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களிடம் 85% விழுக்காடு கட்டணத்தை வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் மாற்று பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.

மாற்று பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சென்று மாற்று சான்றிதழ் கேட்க்கும் போது, மாணவர்கள் பாக்கி கல்விக்கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் (TC – Transfer Certificate) வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுத் தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை இன்று பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் (TC – Transfer Certificate) வழங்காமல் இருக்கக்கூடாது என்றும், மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்று பள்ளிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்து இருக்கிறது.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது புகார்கள் வந்தால், இதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…