காது வலியா? – வீட்டில் உள்ள பொருள்களை வைத்து கை வைத்தியம்

காது வலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடியதாகும். பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிகமாக சலிப்புடிப்பதனால் காதுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரைச்சல் காரணமாகயும் இவ்வலி ஏற்படுகிறது. தொண்டையில் ஏற்படும் அலர்ஜியினாலும், மூக்கை சிந்துவதாலும் காது வலி வரும். பொதுவாக இரவில்தான் காதுவலி அதிகமாக வரும் அப்பொழுது எதையாவது வைத்து சுத்தம் செய்வதை தவிர்க்கவும். ஏன்னென்றால் காதுக்குள் கிருமி தொற்று ஏற்படும்.குழந்தைகளுக்கு காது வலி வந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும். பெரியவர்களுக்கு காது வலி வந்தால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து என செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணெய் பொதுவாக மருத்துவகுணம் உள்ள ஒரு எண்ணெய் ஆகும். எந்த எண்ணையை சூடேற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மீதமான சூட்டில் காதுக்குள் விடலாம். காது வலி குறையும் மேலும் காதில் புண் இருந்தால் ஆறிவிடும்.
  • கொஞ்சம் நல்எண்ணெயில் ஒரு கிராம்பை சேர்த்து சூடு செய்து மிதமான சூட்டில் வலியுள்ள காதில் விடவும் இது விரைவில் வலியை போகும்.
  • தூதுவளை இலையை நீரில் போடு கொதிக்கவைத்து காலை மாலை இருவேளை குடித்து வந்தால் காது வலி விரைவில் குறையும்.
  • மருதாணி வேரை எடுத்து நசுக்கி அதில் சாறினை காதில் விட்டால் வலி குறையும்.
  • தாழம்பூவை நெருப்பு தணலில் காட்டி சாறு பிழிந்து காதில் விட்டால் காது வலி குறையும் மற்றும் காதில் தோன்றும் கட்டி குணமாகும்.
0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…