ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த  கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மேலும் 3 மாத கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது.

அதாவது வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி வரை மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம்  மற்றும் வாகன பதிவு ஆகியவற்றின் ஆவணங்களை புதுப்பித்தல் கொள்ளலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்கூறியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பலமுறை கால நீட்டிப்பு கொடுத்துள்ளது.

மேலும் கடைசியாக இந்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இச்சூழலில் தற்போது  ஜூன் மாதம் 30-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

அனைத்து மாநிலங்களும் இந்த கால நீட்டிப்பு உத்தரவை ஏற்று செயல்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச டி.ஜி.பி.க்கள், போக்குவரத்துத்துறை செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…