இந்த ஒரு காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா..!

புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த காய் சிறந்த மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. புடலங்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்று புடலங்காயும் நாட்டுக்காய் வகையை சார்ந்தது. புடலங்காய் கூட்டு, புடலங்காய் வேர்க்கடலை சேர்த்த பொரியல், புடலங்காய் தொக்கு என பல வகை டிஷ்கள் செய்து சாப்பிடலாம்.

நாய்ப்புடலை, கொத்துப்புடலை, பன்றி புடலை, பேய்ப்புடலை என பல வகை புடலங்காய்கள் இருந்தாலும், பலரும் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதில்லை. இவர்கள் புடலங்காயை மறந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். புடலங்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதைப் பற்றிப் பார்ப்போம்.

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்றவைகள் குணமாகும்.

அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காயை சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனை தீரும். மேலும் இதனால் பசியும் உண்டாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு அளித்து ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளும் சரியாகிவிடும்.

காய்ச்சல் உள்ளவர்களுக்கு புடலங்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் குணமாகி, இயற்கையாக உடல்நலம் சீராகத் தொடங்கும்.

நம் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை சிறுநீராகவும், வியர்வையாகவும் வெளியேற்றும் தன்மையை புடலங்காய் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுபாட்டுக்குள் வரும். மேலும் புடலங்காய் உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

கீழாநெல்லி போன்று புடலங்காய் இலையும், புடலங்காயும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது . மேலும் புடலங்காய் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. மஞ்சள் காமாலையால் நோய் எதிர்ப்பு சத்து குறைந்தவர்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் ஆக்ஸிஜனேற்ற திறனை புடலங்காய் அதிகரிக்க செய்கிறது.

கொத்துமல்லி விதைகளுடன் புடலங்காய் இலையை நசுக்கி சாறை எடுத்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மஞ்சள் காமாலைக்கு புடலங்காய் சாறும் குடிக்கலாம்.

 

0 Shares:
You May Also Like
emoji meaning in tamil
Read More

இமோஜி தமிழ் மினிங் emoji meaning in tamil

உரைகளுக்கு அப்பால் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த ஈமோஜி உதவுகிறது. அவர்கள் ஒரு வேடிக்கையான மற்றும் சுருக்கமான வழியில் உரையாடல்களில் கலகலப்பைக் கொண்டு வருகிறார்கள். ஆனால்…
Read More

Internship Tamil Meaning: இன்டர்ன்ஷிப் என்றால் என்ன? முழுமையான விளக்கம் தமிழில்!

✅ Internship Tamil Meaning – இன்டர்ன்ஷிப் என்றால் என்ன? இன்றைய கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் “Internship” என்பது ஒரு முக்கியமான வார்த்தை.…
Read More

புகார் கடிதம் – complaint letter in tamil

ஒரு புகார் கடிதம் எழுதுவது எப்படி புகார் கடிதம் எழுதுவது கடினமாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் இதற்கு முன் செய்யவில்லை என்றால். உங்கள் முறையான…
Read More

அ வரிசை சொற்கள் – A Letter Words in Tamil

தமிழ் மொழியின் இனிமையான பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இன்று நாம் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ வில் தொடங்கும் சொற்களை கற்கப்…
Read More

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலத்தில் உள்ள பொதுவான இந்திய மளிகைப் பொருட்களின் பட்டியல். தானியங்கள், பருப்பு வகைகள், மாவுகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், உலர் பழங்கள்…