போக்குவரத்து கழக பேருந்து சேவையில் புதிய மாற்றம்

ஹைலைட்ஸ்

  • 70000 மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
  • 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கம்
  • கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும்

போக்குவரத்து துறை செயலாளர் சி. சத்தியமூர்த்தி நேற்று(ஏப்ரல் 21) செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்து கழகங்களில் 120000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 70000 மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயக்கத்தில் உள்ள போருந்துகள் கிருமி நாசுனி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளதால் இரவு 10.00 மணிக்குள் பேருந்துகள் சென்றடைய வேண்டும் என்பதற்க்காக பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் மாற்றத்தை மக்கள் அறிய பேருந்து நிலையங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீத விரைவு பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது பயணிகளின் வருகைக்கு ஏற்ப பகலில் இயக்கப்படுகிறது.

உள்ளூர் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வாழ்கியுள்ளது. சென்னையில் 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

 

0 Shares:
You May Also Like
SBI 1
Read More

எஸ்பிஐ வங்கியின் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்!

கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத…
Read More

ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஓலா ஸ்கூட்டர் முன்பதிவு கடந்த மாதம் திறக்கப்பட்டது மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இறுதியாக தனது முதல் பங்களிப்பை அறிமுகப்படுத்துகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன்…
Read More

ஏப்ரல் 18 ஆம் தேதி RTGS முறையில் பண பரிமாற்ற செய்ய 14 மணிநேரம் தடை

Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும். ரிசர்வ்…
Read More

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட…
Read More

எஸ்பிஐ யோனோ வழங்கும் சூப்பர் சலுகை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு…
Read More

புதியதாக இந்த ஆண்டு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்!

கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது.…