அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு – அரசாணை வெளியீடு

- Advertisement -

தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்ப்பாக அரசாணையில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அடிப்படை விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்ட இந்த மகப்பேறு விடுப்பானது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூலை 1-ம் தேதிக்கு முன்னரே அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால், அவர்கள் 365 நாட்களுக்கு மிகாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox