நம் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் விஷயங்களை வேலை செய்யும் வயதில் வளர்ந்தவர்கள் என்பது இரகசியமல்ல. பேபி பூமர்கள் மத்தியில், ஆமணக்கு எண்ணெய் உழைப்பைத் தூண்டும் என்பது மிகவும் பொதுவான அறிவு என்பதை மட்டும் பாருங்கள். (ஒரு மில்லினியல் அவர்களின் திறனாய்வில் என்ன பின் பாக்கெட் தந்திரங்கள் உள்ளன?) ஆனால் உண்மை என்னவென்றால், அந்த பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள் பழைய மனைவிகளின் கதைகளை விட அதிகம்-அந்த பல கலவைகள் அனைத்து விதமான வலிகளையும் வலிகளையும் ஆற்றுவதில் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும். மற்றும் வியாதிகள்.

வீட்டு வைத்தியம் மூலம் சன் பர்ன் சிகிச்சை
வலிமிகுந்த பல்வலியைத் தணிக்க வெண்ணிலா சாற்றைப் பயன்படுத்துவது முதல் நம்பகமான டக்ட் டேப்பைக் கொண்டு மருவை அகற்றுவது வரை, இந்த மேதை தீர்வுகளில் பெரும்பாலானவை உங்கள் சமையலறை அலமாரியில் சிறிது சலசலக்க மட்டுமே தேவைப்படும். எனவே, உங்கள் மருந்து அலமாரியை எப்படித் தள்ளிவிட்டு, உங்கள் பாட்டி நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள். (நீங்கள் இருக்கும் போது, ​​போனஸாக, இது போன்ற வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கொள்வதன் மூலம், நிதானமான ஜெல்லோ குளியலில் மீண்டும் உதைக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்!)

Table of Contents

1. பசி உண்டாக

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு சேர்த்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

See also  செரிமான பிரச்சனையை சரிசெய்ய உதவும் வெல்லம்..!

2. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

3. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

4. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

5. அஜீரண பேதிக்கு

மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கலந்து குடித்தால் அஜீரண பேதி சரியாகும்.

6. சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

7. வண்டுகடிக்கு

வெட்பாலை இலை, கொடி, வேர் முதலியவற்றை அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

8. பித்தம் குறைய

4 அல்லது 5 வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

9. இருமல் தீர

இலவங்கப்பட்டை ஒன்றரை பலம் வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளை நெய்யில் கலந்து சாப்பிட இருமல் தீரும்.

10. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

11. வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

12. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

13. சேற்று புண்ணிற்கு

மருதாணி இலையை அரைத்து பூச குணமாகும்.

14. சீதபேதிக்கு

நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

15.முடி உதிர்வதை தவிர்க்க

நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

16. வேர்க்குரு நீங்க

சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

17. நெருப்பு சுட்ட புண்ணிற்கு

வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

18. தேமல் மறைய

கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை அற விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

19. தொண்டை நோய்க்கு

கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு குடித்தால் தொண்டை நோய் நீங்கும்.

See also  தானியங்களில் ஒன்றான சாமை அரிசியின் நன்மைகள்

20. பொடுகு குணமாக

வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

21. உடல் பருமன் குறைய

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை மற்றும் மாலை இரு வேளை சாப்பிட உடல் பருமன் குறையும்.

22. முகப்பரு நீங்க

சாதிக்காய், சந்தனம் மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு குறையும்.

23. முதுகு வலி நீங்க

பவழ மல்லியின் இலையை மண் சட்டியில் போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் விட்டு அது 1 டம்ளர் ஆகா குறையும் வரை கொதிக்க வைத்து காலை மற்றும் மாலை குடித்து வர முதுகு வலி குறையும்.

24. நீரிழிவு நீங்க

தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

25. வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

26. வீக்கத்திற்கு ஒற்றடம்

நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

27. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

28. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

29. பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

30. தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

31. தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

32. மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

33. மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

34. உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

See also  1k meaning in tamil

35. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

36. பால் சுரக்க

பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

37. தழும்பு மறைய

வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

38. புழுவெட்டு குணமாக

அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர புழுவெட்டு குணமாகும்.

39. நகச்சுற்று குணமாக

வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

40. வாயு கலைய

வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

41. குடற்புண்

மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

42. தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு

ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

43. பால் உண்டாக

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

44. நீர்க்கடுப்பு எரிவு தீர

எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்.

45. இரத்த சிறுநீருக்கு

மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த சிறுநீர் குணமாகும்.

46. தொண்டை புண்ணிற்கு

நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

47. கைநடுக்கம் தீர

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

48. உடல் எடை அதிகரிக்க

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

49. தாய்ப்பால் சுரக்க கீரை

கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

50. முகப்பொலிவிற்கு

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

51. பல் ஈறு, வீக்கம், வலிக்கு

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

52. படர்தாமரைக்கு

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரை தீரும்.

53. மயக்கம் நீங்க

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

54. மாதவிடாய் சோர்வு

கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

55. ஆண்மை பெறுக

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

56. நரம்பு தளர்ச்சி

அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

57. கக்குவான் இருமல்

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

58. பல்லில் புழுக்கள்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

59. அல்சர்

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

60. சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.