Dark Mode Light Mode

பென்ஷன் வாங்குபவர்கள் இனி PF ஆபீஸ்க்கு சென்று அலைய தேவையில்லை

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தனது பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு (ஓய்வூதியர்கள்) மிகப்பெரிய நிவாரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் வாங்குபவர்கள் இனி பென்சன் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு PF அலுவலகத்துக்கு செல்ல தேவை இல்லை.

இனி பென்சன் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே EPFO இணையதளத்தின் மூலமாக ஈசியாக தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியரின் வங்கி சேமிப்பு புத்தகத்தில் PPO(Pension Payment Order) எண் பதிவிடப்பட வேண்டும். ஓய்வூதியர்கள் தனது வங்கி கணக்கை ஒரு வங்கி கிளையில் இருந்து வேறு ஒரு வங்கி கிளைக்கு மாற்ற வேண்டும் என்றாலும் PPO எண் தேவைப்படுகிறது.

இனி PPO தொடர்பான அனைத்து தகவல்களையும் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற வலைதளத்தின் மூலம் ஓய்வூதியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஈசியாக வங்கிக் கணக்கு எண்ணை வைத்து PPO எண் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

ஓய்வூதியர்கள் தங்களுக்கு தேவையான மிகச் சிறிய தகவல் முதல் மிகப்பெரிய தகவல் வரை எல்லா தகவல்களையும் இணையதளத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம். இதற்காக PF ஆபீஸுக்கு சென்று அலையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

Next Post

தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

Advertisement
Exit mobile version