கொரோனா பரவல் காரணமாக JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகளால் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் சில கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் கோவிட்-19 பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த வரிசையில் JEE மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 முதல் 30ஆம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டரில் பக்கத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு JEE மெயின் – 2021 ஏப்ரல் மாதம் நடைபெறும் செஷன் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்.

NTA

தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பாதுகாப்பு தான் முதன்மையானது என்று பதிவு செய்துள்ளார். மேலும் தேசிய தேர்வுகள் மையத்திற்கு அறிவிப்பையும் பகிர்ந்துள்ளார். அதில், JEE மெயின் – 2021 தேர்வுகள் நான்கு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. முதல் செஷன் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலும், இரண்டாவது செஷன் மார்ச் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலும்நடத்தப்பட்டது. முதல் செஷனில் 6,20,978 பேரும், இரண்டாவது செஷனில் 5,56,248 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

மூன்றாவது செஷன் ஏப்ரல் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அச்சமூட்டும் வகையில் பரவி வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு JEE மெயின் – 2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செஷன் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

இந்த வாய்ப்பை தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தே NTA Abhyas App மூலம் பயிற்சி பெறலாம். மேலும் சமீபத்தில் வெளியான தகவல்களுக்கு www.nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வுகள் சம்மந்தமான சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இல்லையெனில் jeemain@nta.ac.in என்ற E-mail முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0 Shares:
You May Also Like
Read More

அ வரிசை சொற்கள் – A Letter Words in Tamil

தமிழ் மொழியின் இனிமையான பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இன்று நாம் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ வில் தொடங்கும் சொற்களை கற்கப்…
Read More 11

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:- தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும்…
Read More

ஐம்பெரும் காப்பியங்கள்

முன்னுரை காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம்⸴ மணிமேகலை⸴ குண்டலகேசி⸴ வளையாபதி⸴ சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என…
Read More

வல்லினம் மெல்லினம் இடையினம்-Vallinam Mellinam Idaiyinam

வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும்,…
Read More

இலக்கணக் குறிப்பு-ilakkana kurippu

பொதுத்தமிழ் – இலக்கணம் இலக்கணக் குறிப்பறிதல் பெயரெச்சம் வினையெச்சம் முற்றெச்சம் வினைத்தொகை பண்புத்தொகை வினைமுற்று வினையாலணையும் பெயர் உருவகம் உவமைத்தொகை ஈறுகெட்டஎதிர்மறைபெயரெச்சம் இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர்…
Read More

ஈ வரிசை சொற்கள்-EE Varisai Words in Tamil

தமிழ் மொத்த எழுத்து 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும்…