மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்யலாம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின்சார ரீடிங்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நுகர்வோர் செலுத்திய மின் கட்டண தொகையையே இந்த மே மாதமும் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் மின் கட்டணம் கூடுதலாகவோ அல்லது குறைவாக இருந்தால் மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்துவதில் பிரச்சனை ஏற்படும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

eb

இந்த சூழ்நிலையில் மக்கள் தங்களுடைய மின்சார ரீடிங்கை பார்த்து சுய மதிப்பீடு செய்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் மின்சார வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். புகைப்படம் அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களை ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

வாட்ஸ்ஆப் மூலம் புகைப்படம் அனுப்புவோர் தங்களுடைய மின் கட்டணத்தை இணையதளத்தின் வழியாக செலுத்த வேண்டும்.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…