வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு…!

ஏப்ரல் 6-ம் தேதி நடத்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் திருட்டுதனமாக எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன .

இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள அந்த வாக்குச்சாவடியில் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெறிவித்தது.

அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு, மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டன.

ஆண்களுக்கான அந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…