மதுரை முத்து கடி ஜோக் – Madurai Muthu’s Kadi jokes:
1 ஒரு பையன் தலைக்கு அடியில் Dictionary வெச்சிட்டு தூக்குறானாம். ஏன்?
ஏனா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருதாம்.
2 கிணத்துல கல்லை போட்டால் ஏன் முழுகிறது?
ஏன்னா, கல்லுக்கு நீச்சல் தெரியாதாம்.
3 ஒருத்தவங்க Sugar டப்பாவில், Saltனு எழுதி வெச்சாங்க ஏன்?
எல்லா எருமையும் ஏமாத்த.
4 ஒருத்தர் அவருடைய பையன மண் எண்ணெயை ஒற்றி குளிப்பாட்டினாராம். அது என்ன?
ஏன்னா அவருடைய பையன் துறுதுறுனு இருப்பாராம்.
5 ஒருத்தர் எப்பவும் கட்டையோடு சுற்றிக்கொண்டு இருந்தாராம். என்?
ஏன்னா அவரு கட்ட பிரமச்சாரி.
6 ஒருத்தன் கடையில ஊசி வாங்கினான். அது வெடிச்சிடுச்சி. ஏன்?
ஏன்னா, அவன் வாங்கியது குண்டு ஊசியாம்.
7 ஒரு Inspector தேங்காய் எடுத்துக்கிட்டு கைதியை பார்க்க போனாராம்… ஏன்?
துருவி துருவி கேள்வி கேட்க தான்.
8 எந்த ஊருக்கு Award கொடுத்து இருக்காங்க?
விருது(Award) நகர்.
9 ஒருத்தர் எப்பவும் மத்தவங்க கையை தான் எதிர் பார்த்து இருப்பாரு. ஏன்?
ஏன்னா அவரு கை ரேகை ஜோசியராம்.
10 ஒரு பையன் கோவிலுக்கு போன அதிகம் பொய் பேசுகிறான். என்?
ஏன்னா, கோவிலுக்கு போனதும் மெய் மறந்து பொய்ட்டானாம்.
11 ஒருத்தனை ஒரு கொசு கடிச்சுச்சாம் ஆன அந்த கொசுவை அவன் கடிக்காம விட்டுட்டானாம் ஏன்?
ஏன்னா அந்த கொசுல அவனோட இரத்தம் இருக்குல்ல.
12 ஒரு பறவை எழுதி கொண்டே இருக்கும் அது என்ன பறவை?
பென்குயின். ஏன்னா அதுல பென் இருக்குல.