Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Tiruvalluvar 1

திருக்குறள் 20 தமிழில்

குறள் 1

அதிகாரம்:

1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 1, பால்: அறத்துப்பால்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பொருள்:

எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

பதவுரை:

அகர – ‘அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல – முதலாகயுடையன; எழுத்து – எழுதப்படுவது; எல்லாம் – அனைத்தும்; ஆதி – முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன் – கடவுள்; முதற்றே – முதலேயுடையது; உலகு – உலகம்.குறள் 2

அதிகாரம்:

1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 10, பால்: அறத்துப்பால்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பதவுரை:

பிறவி – பிறப்பு, இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது; பெரும் – பெரியதாகிய; கடல் – கடல்; நீந்துவர் – நீந்துவார்கள்; நீந்தார் – நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; இறைவன் அடி சேராதார் – கடவுள் தாள் சென்றடையாதார், இங்கு கடவுளை இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

குறள் 3

அதிகாரம்:

2. வான் சிறப்பு, குறள் எண்: 20, பால்: அறத்துப்பால்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

பொருள்:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

பதவுரை:

நீர் – நீர்; இன்று – இன்றி, இல்லாமல்; அமையாது – நிலைபெறாது, முடியாது; உலகு – உலகம்; எனின் – என்றால்; யார்யார்க்கும் – எவருக்குமே, எவ்வகைப்பட்டவர்க்கும்; வான் – வானம், மழை; இன்று – இல்லாமல்; அமையாது – இருக்காது; ஒழுக்கு – ஒழுக்கம்.

குறள் 4

அதிகாரம்:

5. இல்வாழ்க்கை, குறள் எண்: 45, பால்: அறத்துப்பால்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

பொருள்:

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

பதவுரை:

அன்பும் – அன்பும்; அறனும் – நல்வினையும்; உடைத்தாயின் – உடையதானால்; இல்வாழ்க்கை – இல்லாளோடு கூடிய வாழ்க்கை; பண்பும் – குணமும்; பயனும் – பயனும்; அது – அது.

குறள் 5

அதிகாரம்:

5. இல்வாழ்க்கை, குறள் எண்: 50, பால்: அறத்துப்பால்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

பொருள்:

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

பதவுரை:

வையத்துள் – நிலவுலகத்துள்; வாழ்வாங்கு – வாழும் முறைப்படி; வாழ்பவன் – வாழ்க்கை நடத்துபவன்; வான் – விண்ணுலகம்; உறையும் – தங்கும்; தெய்வத்துள் – தெய்வத் தன்மையில்; வைக்கப்படும் – மதிக்கப்படும்.

குறள் 6

அதிகாரம்:

7. மக்கட்பேறு, குறள் எண்: 66, பால்: அறத்துப்பால்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

பொருள்:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

பதவுரை:

குழல் – புல்லாங்குழல்; இனிது – இனிமையானது; யாழ் – யாழ் என்னும் இசைக்கருவி; இனிது – இனிமையானது என்ப – என்று சொல்லுவர். தம் – தமது; மக்கள் – புதல்வர்; மழலை – குதலை; சொல் – மொழி; கேளாதவர் – கேட்காதவர்.

குறள் 7

அதிகாரம்:

8. அன்புடைமை, குறள் எண்: 71, பால்: அறத்துப்பால்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

பொருள்:

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

பதவுரை:

அன்பிற்கும் – உள்ள நெகிழ்ச்சிக்கும்; உண்டோ – உளதோ; அடைக்கும் – அடைத்து வைக்கும்; தாழ் – தாழ்ப்பாள்; ஆர்வலர் – முதிர்ந்த அன்புடையவர்; புன் – துன்பம்; கணீர் – கண்+நீர், கண்(ணில் பெருகும்) நீர்; பூசல் – ஆரவாரம்; தரும் – கொடுக்கும்

குறள் 8

அதிகாரம்:

11. செய்ந்நன்றியறிதல், குறள் எண்: 108, பால்: அறத்துப்பால்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

பொருள்:

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

பதவுரை:

நன்றி – உதவி; மறப்பது – மறத்தல்; நன்று – நன்மை; அன்று – இல்லை நன்று – நன்மை; அல்லதுஅல்லாதது; அன்றே -அக்கணமே; மறப்பது – மறத்தல்; நன்று – நன்மை.

குறள் 9

அதிகாரம்:

13. அடக்கமுடைமை, குறள் எண்: 129, பால்: அறத்துப்பால்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

பொருள்:

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

பதவுரை:

தீயினால் – நெருப்பால்; சுட்ட – சுட்ட (முதல் அடியில் உள்ள ‘சுட்ட’ நெருப்பினால் சுட்டதைக் குறிக்கும்); புண் – வடு; உள்-உள்ளுக்குள். ஆறும் – தீரும்; ஆறாதே – ஆறமாட்டாதே (மனக்கொதிப்பு ஆறாததைக் குறிக்கும்); நாவினால் – நாக்கினால்; சுட்ட – எரித்த (ஈற்றடியில் உள்ள ‘சுட்ட’ வெம்மையான மொழியால் சுட்டதைக் குறிக்கிறது); வடு – தழும்பு.

குறள் 10

அதிகாரம்:

16. பொறையுடைமை, குறள் எண்: 151, பால்: அறத்துப்பால்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொருள்:

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

பதவுரை:

அகழ்வாரை – தோண்டுவாரை; தாங்கும் – சுமக்கும்; நிலம் – நிலம்; போல – ஒக்க; தம்மை – தம்மை; இகழ்வார் – இகழ்பவர்கள்; பொறுத்தல் – பொறுத்துக் கொள்ளுதல்; தலை – முதன்மை, சிறப்பு.

குறள்11

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

ணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.

குறள்  12

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

விளக்கம்:

முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.

குறள் 13

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

பொருள்:

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

குறள் 14

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருள்:

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

குறள் 15

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

பொருள்:

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

குறள் 16

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பொருள்:

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்

குறள் 17

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்:

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

குறள் 18

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பொருள்:

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

குறள் 19

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்:

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்

குறள் 20

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்:

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .