Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
iyarkai katturai

இயற்கை கட்டுரை | iyarkai katturai

முன்னுரை

  • இயற்கை என்பது இயல்பாகவே உருவானவை. இயற்கை வளங்களைப் பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகின்றது. இயற்கையின் கொடையான இயற்கை வளங்களைக் காப்பது ஒவ்வொரு தனிமனிதனதும் சமூகத்தினதும் தலையாய கடமையாகும்.
  • உலகமானது இயற்கையான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களாலானது. இத்தகைய இயற்கையானது அளிக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை ஆகும். இயற்கையின் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைச் சூழல்

  • இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையை சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கைச் சூழலைக் காப்பது மிக அவசியமாகும்.
  • வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும்.

இயற்கை வளங்களின் பயன்கள்

  • இயற்கையில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மட்டுமன்றி பூமியைக் குடைந்து பெறும் வளங்களும் மிக முக்கியமானவையாகும்.
  • வன வளங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு அதாவது உணவு மற்றும் உறைவிடம் போன்றவற்றிற்கு வழி வகை செய்வது மட்டுமல்லாமல், பூமியின் தட்பவெப்ப நிலை மற்றும் பருவ மழை ஆகியவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றது.
  • காடுகள் மழையை தருவதுடன் மண் அரிப்பினைத் தடுக்கிறது. பூமியின் தட்ப வெப்பநிலையையும் பாதுகாத்து மழை தரும் கடவுளாக உள்ளது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரமே அதன் நீர்வளத்தை சார்ந்துள்ளது. உலக உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு ஒவ்வொரு இயற்கை வளங்களும் பல பயன்களை தருகின்றன.

இயற்கையைப் பாதுகாப்போம்

  • இயற்கையைப் பாதுகாப்பதற்கு மாசுபடுத்தாத வழிகளை பயன்படுத்த வேண்டும், இதனால் இயற்கை பாதுகாப்புடன் மனித தேவையும் பூர்த்தியாகும். ஒரு தனி நபரின் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கையை சிதைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.

இயற்கை மாசுபாடு

  • இன்று மனித குலம் எதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சனைகளில் இயற்கை மாசுபாடு முதன்மை வகிக்கின்றது. தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும், நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது.
  • தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது.
  • நெகிழி பாவனைகளின் அதிகரிப்பினால் மண்வளம் மாசடைகின்றது. இதனால் விவசாய நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க செடி, கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகின்றன.

முடிவுரை

  • ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்க்கையானது இயற்கையைச் சார்ந்தே உள்ளது. இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலை மாறி தற்போது இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி நகரங்களில் பல்வேறு மாசுகளுக்கு இடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகி உள்ளது.