Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
mokka-jokes-in-tamil

கடி ஜோக்

ப்ரண்ட் 1 : ஒரு மாடு ஒரு நாள் கடைக்கு போச்சான் டக்குனு அங்க இருந்த கதவ கடிச்சு சாப்பிட ஆரமிச்சுடுச்சான் ஏன் ?

ப்ரண்ட் 2 : ஏன் ?

ப்ரண்ட் 1 : ஏனா அந்த கதவுல Pull-(புல்) னு போட்ருந்துச்சான்

ஒருத்தன் அவன் பிரென்ட் கிட்ட சொன்னானாம் டேய் எங்க அப்பாக்கு நான்தான்டா கதவு னு

ஏன் ?

ஏனா அவங்க அப்பாக்கு எப்போ கோவம் வந்தாலும் அவன “சாத்து சாத்து” னு சாத்துவாராம் …..

 

ஒருத்தன் அவன் போன் ல இருந்து ஒரு நம்பருக்கு கால் பண்ணானாம் கால் போகவே இல்லயாம்

ஏன் ?

ஒரு நம்பருக்கு கால் பண்ணா எப்படி 10 நம்பருக்கு கால் பண்ணாதான போகும்…

 

அம்மா : டேய் ஏன்டா வேர்க்க வேர்க்க சாப்டுட்டு இருக்க அந்த Fan ah போட வேண்டிதான

மகன் : இல்லமா அப்பாதான் வேர்வை சிந்தி சாப்பிட சொன்னாரு …..

படிச்சுக்கிட்டே விளையாடற விளையாட்டு என்னனு சொல்லு பாப்போம்

தெரியலயே ?

கபடி…

பாபு : டேய் ஒருத்தர் ஒரு புது வீடு கட்டிட்டு lights எல்லாமே set பண்ணிட்டு போயிடு சுவிட்ச்-ah போட்டாராம் எல்லாமே வெடிச்சிடிசான் டா

கோபு : ஏன்டா ?

பாபு : ஏன்னா அங்க இருந்தது எல்லாமே குண்டு-Bulb ஆம் ..

கோழி முட்ட போட்டுக்கிட்டே இருக்கே அது ஏன் ?

ஏனா அதுக்கு 1,2,3…. தெரியாது அதான்

ப்ரண்ட் 1 : மச்சான் நேத்து எங்க வீடு பக்கத்துல ஒரு அண்ணனுக்கு கல்யாணம் நடந்துச்சு மச்சான் நானும் போனேன் அங்க போன எல்லாரும் மேலையும் ஒரே ஈ -ஆ மொய்க்குது மச்சான்

ப்ரண்ட் 2 : ஏன்டா ?

ப்ரண்ட் 1 : ஏன்னா அந்த கல்யாணம் jam-jam னு நடந்துச்சு அதான்

ஒருத்தன் அவன் பொண்டாட்டி மேல எப்போ பாத்தாலும் தண்ணி தெளிச்சு கிட்டே இருந்தானாம்

ஏன் ?

ஏன்னா அவனோட மாமனார் அவரு பொண்ண பூ மாறி பாத்துக்க சொன்னாராம்

 

மாணவன் : ஐயா பச்சை கிளி , பஞ்சவர்ண கிளி னு நிறைய கிளி இருக்கு ஆனா ஒரு கிளியால மட்டும் பறக்க முடியாது அது என்ன கிளி ஐயா

தமிழ் ஐயா : எனக்கு தெரியல பா நீயே சொல்லேன்

மாணவன் : சங்கிலி …

ஒருத்தன் கோவத்துல அவன் வீட்ல இருந்த குக்கர் – அ தூக்கி கீழ போட்டானாம் ஆனா அது கீழ விழவே இல்லயாம்

ஏன்?

ஏனா அது Butterfly குக்கராம்

கோமதி : கோகிலா ஒரு யானை வேகமா ஒரு மளிகை கடைக்கு ஓடி போச்சான் அது அங்க போய் என்ன வாங்கும் ?

கோகிலா : தெரியலயே !…

கோமதி : வேற என்ன வாங்கும் மூச்சிதான் வாங்கும்.

ஒரு மன்னர் போருக்கு போகும் போது Eraser எடுத்துட்டு போனாராம்

ஏன் ?

ஏன்னா எதிரி நாட்டு மன்னரை அழிக்கவாம்

Praveen : டேய் ஏன் ஊருல ஒருத்தன தூக்கி சாம்பார்ல போட்டுடாங்கடா ?

Mani : என்னடா சொல்ற ?

Praveen : ஆமாடா ஏனா அவன்தான் எங்க

ஊருல பெரிய பருப்பான் !…

 

Friend : Machan பசு மாடு ஏன் தெரியுமா பால் கொடுக்குது

Machan : ஏன் ?

Friend : ஏனா அதால டீ காபி தர முடியாதுல அதான்..

 

ஒரு பையன் Daily ஸ்கூலுக்கு ஏணி எடுத்துட்டு போவானாம் ஏன் ?

ஏனா அது “மேல்” நிலைப்பள்ளி – யாம்

 

ஒரு டாக்டர் அவரு கிட்ட ரெண்டு காரு மூணு பைக் இருந்தாலும் டெய்லி நடந்தே ஹாஸ்ப்பிட்டல்க்கு போவாராம்

ஏன் ?

ஏன்னா அவரு “கால்நடை மருத்துவராம்” அதான் நடந்தே போவாராம்

 

ஒருத்தன் பைக் ல 120 கிலோ மீட்டர் வேகத்துல வந்து அவன் வீட்டு கதவ தட்டுனானாம்

ஏன் ?

ஏன்னா அவங்க வீட்டுல Calling Bell இல்லயாம் அதான்

ஒருத்தன் மழையில நனைஞ்சிகிட்டே வீட்டுக்கு வந்தானாம் வீட்டுக்கு வந்து பாத்தா மண்ட Full ah வீங்கி இருந்துச்சாம்

ஏன்?

ஏனா அவன் கொட்டுற மழையில நனைஞ்சிகிட்டே வந்தானாம்

 

ஒரு டாக்டர் ஆப்ரேஷன்-கு போகும் போது கடப்பாரை கோடாரி எல்லாம் எடுத்துட்டு போனாராம்

ஏன் ?

ஏன்னா Patient ah கல்நெஞ்சக்காரர்னு சொன்னாங்களாம் அதான்

 

வினோத் : மச்சான் ஒரு மாசத்துக்கு எத்தனை நாலு டா

மச்சான் : 30 நாள் டா

வினோத் : இல்ல தப்பு…. ஒரு மாசத்துக்கு மூணு நாலு தான் 4,14,24

 

ஒருத்தன் டாக்டர் குடுத்த மாத்திரைய எடுத்துக்கிட்டு சுடுகாட்டுக்கு போய்ட்டானாம்

ஏன் ?

ஏன்னா டாக்டர் அந்த மாத்திரைய வச்சி ஆவி பிடிக்க சொன்னாராம் அதான்

 

பையன் : அம்மா எல்லா பாய்-லயும் படுக்க முடியும் ஆனா ஒரு பாய்-ல மட்டும் படுக்க முடியாது அது என்ன மா ?

அம்மா : அது என்ன பாய் டா ?

பையன் : Du-bai

 

Friend 1 : மரமே இல்லாத காடு ஒன்னு இருக்கு அது என்ன காடு ?

Friend 2: என்னவா இருக்கும்..

Friend 1 : சிம் கா(ர்)டு …

 

ஒரு அப்பா அவரோட பையனுக்கு உடம்பு சரி இல்லனு Hospital ku கூட்டிட்டு போனாராம் டாக்டர் ஊசி போட வந்தா அந்த அப்பா தடுத்துகிட்டே இருந்தாராம்

ஏன் ?

ஏன்னா அது “தடுப்பு” ஊசியாம்

 

ஒருத்தர் சொன்னாராம் அவரு பையன் படிக்கிற ஸ்கூல் ல பூனைகள் நடமாட்டம் அதிகமா இருக்குனு சொன்னாராம்

ஏன் ?

ஏன்னா அது “எலி மெண்டரி” ஸ்கூல் ஆம்

 

ஜெனனி : சிந்து ஒரு நாள் A,B,C,D…எல்லா Letters kum Running Race வச்சாங்களாம் எல்லா Letters-um ஓடி போச்சாம் ஆனா S-letter மட்டும் நீந்தி போச்சாம் ஏன் ?

சிந்து : ஏன் டி ?

ஜெனனி : ஏன்னா அதுக்கு முன்னாடி R (ஆறு) இருக்குல

 

பையன் : அப்பா குயில் முட்ட போடும் காக்கா முட்ட போடும் ஆனா ஒரு பறவை மட்டும் முட்ட போடாது அது என்ன பா ?

அப்பா : எனக்கு தெரியலபா நீயே சொல்லேன் ?

பையன் : ஆண் பறவை பா…..

 

Student : டீச்சர் உங்களுக்கு மைக்கேல் ஜாக்சன்-அ தெரியுமா ?அவருக்கு ஆடத்தெரியும் பாடத்தெரியும் ஆனா உக்கார சொன்னா மட்டும் உக்கார மாட்டாரு ஏன் டீச்சர் ?

Teacher : ம்ம்ம் தெரியலயே டா !…

Student : ஏனா அவருக்கு தமிழ் தெரியாது ….

 

பேரன் : பாட்டி ஒருத்தனுக்கு அடிபட்டுடிச்சான் அவன் Hospital கு போனானாம்… டாக்டர் போயிட்டு ரத்தம் எடுத்துட்டு வா-னு சொன்னாராம்… அவன் போயிட்டு இலைய அறுத்துட்டு இருந்தானாம் ஏன் பாட்டி ?..

பாட்டி : தெரியலயே ?…

பேரன் : ஏனா டாக்டர் இள-ரத்தம் கொண்டு வர சொன்னாராம்..

சப்பாத்திக்கும் “Naan”கும் Running Race வச்சாங்களாம் அதுல Naan ஜெயிச்சுடுச்சாம் ஆனா பரிச சப்பாத்திக்கு குடுத்துட்டாங்களாம் ஏன் ?

ஏனா யாரு ஜெயிச்சா னு கேட்டப்போ சப்பாத்தி Naan (நான்)னு சொல்லிடுச்சாம் அதான்

 

பேத்தி : பாட்டி ஒரு வயசான முதியவர் ஒரு பசு மாட்ட கூட்டிகிட்டு போருக்கு போனாராம் பாட்டி

பாட்டி : அச்சச்சோ அவரும் அந்த மாடும் திரும்ப வந்தாங்களா

பேத்தி : வந்துட்டாங்க பாட்டி அவரு மாட்ட கூட்டிட்டு போனது வைக்கப் போர்-கு…