• பூம்புகார் தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தம் உள்ள வாக்குகளைவிட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகிள்ள நிலையில், அந்த பூத்துக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
  • பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் உள்ளநிலையில் 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி 628 வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • இதுபற்றி சந்தேகம் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் இவர்கள் நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். இவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர்.
  • மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பூம்புகார் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பு அறையில் கொண்டு செல்ல முயற்சித்தபோது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
  • இதனைத்தொடர்ந்து 175 ஆம் எண் பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேட்பாளர்களின் முகவர்கள் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
See also  தமிழகத்தில் மினி ஊரடங்குதான் - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்