சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
  • சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார்.
  • அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார்.
  • கடந்த மார்ச் 27 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
  • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
  • இன்னும் சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…