- கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
- சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார்.
- அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார்.
- கடந்த மார்ச் 27 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
- இன்னும் சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

