வேப்பம் பூவின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

வேப்ப மரத்தின் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது. வேப்பமரம் உள்ள வீட்டில் எந்த நோயும் வராது என்றே சொல்லாம். அதனால் வீட்டில் ஒரு வேப்பமரம் வளர்ப்பது நல்லது. வேம்பின் குச்சி, இலை, துளிர், பூ, கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

வேப்பம்பூ சித்திரை மாதத்தில் தான் பூக்கும். இந்த பூக்கள் காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பம்பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால், நாம் அதனை வருடம் முழுக்க பயன் படுத்திக் கொள்ளலாம். மாதக்கணக்கில் வைத்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் மாறாது. வேப்பம்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

  • கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும் மற்றும் கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வேப்பம்பூ கட்டுப்படுத்துகிறது.
  • வெயிலினால் ஏற்படும் நாவறட்சி, அரிப்பு, தோல் வியாதி, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  • வேப்பம் பூவை மென்று தின்றால் வாயுத்தொல்லை, அதிகமாக ஏப்பம் வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • சாக்பீஸ், மண், விபூதி போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு வேப்பம்பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.
  • வேப்பம் பூவை ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதால் நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்று சரி ஆகிவிடும். மேலும் இது அல்சருக்கும் அருமருந்து.
  • வேப்பம்பூவை தொடர்ந்து சிறிதளவு உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
  • உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுகிறது. அதனால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் இருக்க இது உதவும்.
  • வெயிலில் காயவைத்துப் பொடி செய்த வேப்பம் பூவை, பருப்புப் பொடியுடன் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் வராது.
  • உஷ்ண உடம்பு கொண்டவர்கள் வேப்பம் பூவை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது உடல் சூட்டை அதிகரித்துவிடும். அதேபோல் வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும்.
  • வேப்பம் பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். இப்படி செய்து சாப்பிட்டால் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.
0 Shares:
You May Also Like
Read More

மூச்சு பிடிப்பு | Moochu Pidippu

மூச்சு பிடிப்பு காரணம்: பெரும்பாலும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதன் மூலமாக இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அதேபோல் அஜீரணம் சம்மந்தமான பிரச்சனை…
Read More

பாட்டி வைத்தியம்

நம் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் விஷயங்களை வேலை செய்யும் வயதில் வளர்ந்தவர்கள் என்பது இரகசியமல்ல. பேபி பூமர்கள் மத்தியில், ஆமணக்கு எண்ணெய் உழைப்பைத் தூண்டும்…
Read More

பூச்சி கடிக்கு வீட்டு வைத்தியங்கள்

தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை…
Read More

ஆலிவ் ஆயில் பயன்கள், பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

ஆலிவ் ஆயில் ஒரு மிகப் பயனுள்ள எண்ணெய் ஆகும். இது ஒரு மருந்து ஆகியவை அல்லது சுற்றுச்சூழல் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள அதிகமான…
Read More

மூலிகை செடிகள் mooligai chedigal in tamil

பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு வகையான தாவரங்களைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவ தாவரங்கள் பெரும்பாலும் காடுகளில் உள்ளன. சில சமயங்களில் அவையும் வளர்க்கப்படுகின்றன.…