அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது.

TNPSC தேர்வு ஈரோட்டில் நேற்று 2 மையங்களில் நடத்தப்பட்டது. தேர்வை கண்காணிப்பதற்க்காக TNPSC தலைவர் பாலசந்திரன் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவர் ஈரோடு தாலுகாபள்ளி அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேர்வு உபகரணங்களை ஆய்வு செய்தார்.

அதன்பிறகு ஈரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த TNPSC தேர்வை அவர் பார்வையிட்டார். பின்னர் TNPSC தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் 152 வகையான துறை சார்ந்த தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது தேர்வுகள் நடத்தப்படுகிறது.

TNPSC தேர்வு கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 55,161 பேர் தேர்வை எழுதி வருகின்றனர். 152 துறை சார்ந்த தேர்வை மொத்தம் 1,37,721 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

ஈரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஈரோட்டில் நேற்று காலை நடந்த தேர்வில் 92 பேரும், மாலையில் நடந்த தேர்வில் 49 பேரும் TNPSC தேர்வு எழுதினார்கள். இந்த ஆய்வு நடைபெறும் போது ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

See also  சர்வதேச பயணிகள் விமானங்கள் இடைநிறுத்தம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு