மத்திய அரசின் அவசரகால கடன் திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, நிறுவனங்கள் எந்த இடையூறுகளும் இன்றி, வங்கிகளில் குறிப்பிட்ட கடன் தொகையை வாங்கி கொள்ள முடியும்.

அவசர கால கடன் வழங்கும் நிறுவனங்கள்

  • 12 பொதுத் துறை வங்கிகள்
  • 24 தனியார் துறை வங்கிகள்
  • 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

இந்நிலையில், மத்திய அரசு இந்த அவசரகால திட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயணம் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது . இந்த திட்டமானது 3 லட்சம் கோடி ரூபாய் கடன் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அவசர கால கடன் உதவி திட்டத்திற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.

0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…