வாகனம் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவி

வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்குவதன் காரணமாக சாலை விபத்து நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் டிரைவரை எழுப்பும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி ஒலி எழுப்பும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும்போது ஓட்டுபவர் கண்கள் மூடினால் ஒலியை எழுப்பி, அவரை விழிப்படையச்செய்யும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளோம். வாகனம் ஓட்டுபவரின் இருக்கைக்கு அருகே, அவரது கண்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும்.

வாகனம் ஓட்டுபவர் கண்களை மூடும் போது கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட ‘ஐ ட்ராக்கர்’ எனப்படும் கருவி ஒலி எழுப்பி டிரைவரை விழிப்படையச் செய்யும். எல்லா நேரங்களிலும்(பகல் இரவு) இந்த கருவி செயல்படும் என்று கல்லுாரியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

இக்கருவியை, தெலுங்கானா மாநில வர்த்தகத்துறை முதன்மை செயலரிடம் தகவல் தொழில்நுட்ப கல்லுாரி நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வாகனங்களில் இந்த கருவியை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.

0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…