கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் மற்றும் கூடுதல் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.75 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : மேலாளர், துணை மேலாளர் மற்றும் கூடுதல்

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணியிடம் : கடலூர் மாவட்டம்

கல்வித் தகுதி : பி.வி.எஸ்.சி, ஐ.டி.ஐ, எம்.எஸ்.சி மற்றும் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.1,75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Limited, Sethiathope, Cuddalore-608702.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.250
  • எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு – ரூ.100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

See also  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!