நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா காலத்திலும் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தடைகளை மீறி இன்று உலகெங்கும் பல திரையருங்களில் வெளியாகி மிக சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.இளைய தளபதி விஜயும் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்த இத்திரைப்படமானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் மாஸ் ஹிட் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் வில்லத்தனமும் பல வசனங்களும் விஜய் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் தளபதிக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் தனது நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் முதல் பகுதியில் நடிக்கும் ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் பதியும் அளவிற்கு சிறப்பு மிக்கதாக இருந்தது. மேலும் மாளவிகா தளபதியுடன் இணைத்து நடித்த காட்சிகள் குறைவாக இருந்தாலும் கலக்கலாகவும் சிறப்பாகவும் இருந்தது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடித்தரும் என்று ரசிகர்கள்…
Author: gpkumar
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஜனவரி 13 அன்று கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவருர், நாகப்பட்டினம் , சிவகங்கை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களிலும் மற்றும் புதுவையில் பெரும்பான்மையான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.…
ஜெயம் ரவி பூமி ஸ்னீக் பீக் | ஜனவரி 14 முதல் ஸ்ட்ரீமிங் . ஒரு விஞ்ஞானி, ஒரு விவசாயி மற்றும் ஒரு போராளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை.
படம்: கபடதரி தயாரிப்பாளர்: டாக்டர்.ஜி.தனஞ்சயன் & லலிதா தனஞ்சயன் இயக்குனர்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு: ரசமதி இசை இயக்குனர்: சைமன் கே கிங் ஆசிரியர்: கே.எல். பிரவீன் கலை இயக்குனர்: விதேஷ் அதிரடி நடனம்: ஸ்டண்ட் சில்வா நடிகர்கள் மற்றும் குழு: சிபி சத்யராஜ், ஸ்வேதா நந்திதா, நாசர், ஜெயபிரகாஷ், சுமன் ரங்கநாத், ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சம்பத்ka
இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததாக 95% பள்ளிகள் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையை ஏற்று மாணவர்களின் நலனை கருதி தமிழக அரசு பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளது.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 சுற்று பேச்சுவார்த்தைகளில் சுமுகமான தீர்வு எடுக்கப்படும் முடிவு என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற 8 வது சுற்று பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்தது. விவசாயிகளுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைத்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை மிகவும் வேதனை அளிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்த 3 வேளாண் சட்டங்கள் சிறப்பானது என்று 1 மனுக்கள் கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று கடிந்து கொண்டார். இந்த போராட்டங்களால் பாதிக்கப்படும் குடிமக்களின் வாழ்வு மற்றும் உடைமைகளை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் போராட்டத்தில் சிலர் தற்கொலை செய்துள்ளனர். போராட்டத்தில் ஒரு பகுதியாக முதியோர்…
மாஸ்டர் படத்தை ஒன்றரை வருட போராட்டத்துக்கு பிறகு உங்களுக்கு வழங்குகிறோம். தயவு செய்து இன்டர்நெட் காட்சிகளை பகிராதீர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்த படக்குழு தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கோரியது. Dear all It’s been a 1.5 year long struggle to bring Master…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தை சார்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொங்கல் பண்டிகையின்போது ஸ்கூட்டி பெப் ப்ள்ஸ ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாடல் ஸ்கூட்டி பெண்கள் எளிமையாக இந்தியாவில் பெண்கள் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் இருந்து வருகிறது. எளிமையான டிசைன், கையாள்வதற்கு வசதியான ஸ்கூட்டராக இருப்பதுடன் விலையிலும் பெண்களுக்கு ஏதுவான மாடலாக இருக்கிறது. இந்த மாடல் தமிழ் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் பெயரில் வெளியிடப்பட்ட முதல் சிறப்பு பதிப்பு மாடலாகவும் இருக்கும் என்று தெரிகிறது. ‘முதல் காதல்’ என்ற வாசகம் ஸ்கூட்டரின் பக்கவாட்டு பேனல்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக தமிழ் பெயரில் வந்துள்ள ஸ்கூட்டர் மாடலாகவும் குறிப்பிடப்படலாம். இந்த வாசகம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டருக்கு…
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது . ட்ராவிற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் விஹாரி புதிய மைல்கல்லை தொட்டனர். இருவரும் நிதனமாகவும் நன்றாகவும் ஆடி போட்டியை ட்ரா செய்தனர். விஹாரி 161பந்தில் 23 ரன்னும் அஸ்வின் 128 பந்தில் 39 ரன்னும் எடுத்து களத்தில் இருந்து ட்ராவிற்கு உதவினர். ஆஸ்திரேலிக்கு எதிரான 4போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 15.ம் தேதி தொடங்குகிறது அஸ்வின்- விஹாரி இருவரும் சேர்ந்து 289 பந்துகளை சந்தித்து 62 ரன்களை எடுத்தனர்.
முட்டை ஒரு புரோட்டின் நிறைந்த உணவு. இதை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சாப்பிடுகிறார்கள். அந்த முட்டை நல்ல முட்டையா?அல்லது கெட்டுப்போன முட்டையா? என்று பார்க்கலாம். முன்பெல்லாம் முட்டையை காதுக்கிட்ட குலுக்கும்போது சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று சொல்வார்கள், அல்லது உடைத்து பார்க்கும்போது மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தால் அது கெட்டுப்போன முட்டை என்பார்கள். இப்பொழுது நீங்க ஒரு டம்பளரில் தண்ணீர் நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போடவும், முட்டை முழுவதுமாக மூழ்கி டம்பளரில் அடிப்பகுதியில் தங்கினால் அது புதிய முட்டை. டம்ளருக்குள் ஒரு பக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகிவிட்டது என்று அர்த்தம்.நன்றாக சாய்ந்தநிலையில் மிதந்துகொண்டிருந்தால் 2 அல்லது 3 வாரம் பழைய முட்டை என்று அர்த்தம். ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை பழையது அல்லது கெட்டுப்போனது…
வணக்கம் நண்பர்களே! இன்று நான் உங்களுக்கு பகிரப்போகும் அனுபவம்… இதுவரை நான் எழுதிய எந்த கூட்டிலும் ஒருபோதும் ரொம்பப் பரவசத்துடன் எழுதவில்லை. என் காலை குட்டி டீயுடன் ஆரம்பிக்கிறேன்; மாறாமல் சாயங்காலம் முழுதும் என் வீட்டில் உலா வரும் ஒன்று – Polimer News Live Today Tamil! இந்த அனுபவத்தை நேர்பட முதல் வரியில் பகிரலாமா? நம்ம ஊர் நியூஸ் அப்படியே சுவைப்படு! முக்கிய சிறப்பம்சங்கள் (Key Highlights) Polimer News Live Today Tamil – 24×7 நேரடி தமிழ்ச் செய்தி உடனே உங்கள் வீட்டுக்கு! இந்திய அரசியல், சீமான், பாஜக முதல் பாடல், விளையாட்டு, வாழ்க்கை… என்னும் தினசரி தொடக்கப் பதிவு. சத்தியமான தமிழ் Polymer News செய்தியுடன் – உண்மையை நேரடியாக வழங்கும் நட்பு. புத்தகம், குடும்பம், சமுதாயம், அரசியல், உயிரோடு இருக்கும் செய்திகள். Polymer News யூசியூப்பி, ப்லே ஸ்டோர், ஆப் ஸ்டோர், பிற இணையங்களில் சிறப்பு…
