Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

தேர்தல் ஆணையத்திற்கு கள்ள ஓட்டு போடுவதை தடுக்க உத்தரவு

  • சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • மேலும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கிற்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • தேர்தல் ஆணையத்திற்கு நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • மேலும் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Previous Post
International passenger flights

சர்வதேச பயணிகள் விமானங்கள் இடைநிறுத்தம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

Next Post
Chennai Port Trust1

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு

Advertisement