• சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • மேலும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கிற்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • தேர்தல் ஆணையத்திற்கு நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • மேலும் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
See also  தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு - 59,900 வரை சம்பளம்