Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா....
தற்போது பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வாய்ப்பில்லை…….மத்திய நிதியமைச்சர் தகவல்
2000 ரூபாய் நோட்டு அச்சடித்து 2 வருஷம் ஆகிவிட்டது மத்திய அரசு தகவல்

தற்போது பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வாய்ப்பில்லை…….மத்திய நிதியமைச்சர் தகவல்

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மக்களவையில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் கியாஸ் சிலிண்டர்,இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை.

Advertisement

பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் எப்போது கொண்டுவரலாம் என்ற தேதியை சட்டப்படி ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் பரிந்துரைக்க முடியும்.

ஆனால், இப்போதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரைக்கவில்லை என்று அதில் தெரிவித்து இருந்தார்.

Anurag Thakur

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ” கடந்த ஆண்டில் பெட்ரோல் மீதான உற்பத்திவரி லிட்டருக்கு ரூ.19.98 ஆக இருந்தது. ஆனால், தற்போது லிட்டருக்கு ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த ஆண்டில் ரூ.15.83 ஆக இருந்தது, தற்போது லிட்டருக்கு ரூ.31.80 ஆக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Previous Post
corona virus

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா....

Next Post
2000 rupees

2000 ரூபாய் நோட்டு அச்சடித்து 2 வருஷம் ஆகிவிட்டது மத்திய அரசு தகவல்

Advertisement