Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை முக்கிய உத்தரவு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக உணவு வழங்கல் துறை பிறப்பித்துள்ள உத்தரவை பார்ப்போம்.

  • தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.
  • அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாத அட்டை என மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன.
  • ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணத்தால் ஒருவரே, இரண்டு பேரின் வேலையை பார்க்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
  • இதற்கிடையில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேலுள்ள கடைகளில் பொருட்களை விரைவாக வழங்க கூடுதலாக ஒரு ஊழியரை நியமிக்குமாறு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.
  • இதுதொடர்பாக கூட்டுறவுத் துறைக்கும், நுகர்பொருள் வாணிபத்திற்கும் ரேஷன் கடைகளில் கூடுதலாக ஊழியரை நியமிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • ஆனால் இதுவரை ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் கடை ஊழியர்கள் தங்களின் பணிச்சுமையை குறைப்பதற்க்காக சில ஊழியர்களை முறைகேடாக நியமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • அதுவும் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் கடைகளில் பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது சட்டவிரோதமான செயல், இதனால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
  • இந்த சூழலில் தமிழக ரேஷன் கடைகளில் மத்திய குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • அதன்படி, ரேஷன் கடைகளுக்குள் வெளிநபரை அனுமதிக்கக் கூடாது. வேலை நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கடைகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
  • இதற்கிடையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவரான பாலசுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • அப்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கும், கூட்டுறவு துறைக்கும் இணையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கோம்.
  • ஆனால் தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே வரும் 23ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.
Previous Post
vijay sethupathi 1200

யாழா யாழா - பாடல் வீடியோ | லாபம்

Next Post
seasonal food

பருவகால உணவை சாப்பிடுவதால் ஏற்படும் 5 ஆரோக்கியமான நன்மைகள்

Advertisement