ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக உணவு வழங்கல் துறை பிறப்பித்துள்ள உத்தரவை பார்ப்போம்.

  • தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.
  • அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாத அட்டை என மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன.
  • ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணத்தால் ஒருவரே, இரண்டு பேரின் வேலையை பார்க்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
  • இதற்கிடையில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேலுள்ள கடைகளில் பொருட்களை விரைவாக வழங்க கூடுதலாக ஒரு ஊழியரை நியமிக்குமாறு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.
  • இதுதொடர்பாக கூட்டுறவுத் துறைக்கும், நுகர்பொருள் வாணிபத்திற்கும் ரேஷன் கடைகளில் கூடுதலாக ஊழியரை நியமிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • ஆனால் இதுவரை ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் கடை ஊழியர்கள் தங்களின் பணிச்சுமையை குறைப்பதற்க்காக சில ஊழியர்களை முறைகேடாக நியமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • அதுவும் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் கடைகளில் பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது சட்டவிரோதமான செயல், இதனால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
  • இந்த சூழலில் தமிழக ரேஷன் கடைகளில் மத்திய குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • அதன்படி, ரேஷன் கடைகளுக்குள் வெளிநபரை அனுமதிக்கக் கூடாது. வேலை நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கடைகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
  • இதற்கிடையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவரான பாலசுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • அப்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கும், கூட்டுறவு துறைக்கும் இணையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கோம்.
  • ஆனால் தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே வரும் 23ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.
See also  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!