கண் உங்கள் ஐந்து புலன்களில் மிக முக்கியமான உறுப்பு ஆகும் .கண்ணுக்கு அத்தியாவசிய தேவையான ஒன்று வைட்டமின் ‘A’ இதனால் கண்களை பாதுகாப்பாகவும் நல்ல பார்வையும் பெற முடியும். நல்ல கண் ஆரோக்கியம் உங்கள் தட்டில் உள்ள உணவிலிருந்து தொடங்குகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் C மற்றும் E போன்ற ஊட்டச்சத்துக்கள் வயது தொடர்பான பார்வை சிக்கல்களை மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்றவற்றிலிருந்து அகற்ற உதவும்.

கண்களைக்காக்கும் வைட்டமின் ‘A’ உணவுகள் :

எல்லாவித ஆரஞ்சு, மஞ்சள் நிற காய்கறிகளிலும் மற்றும் பசலைக்கீரை , கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளன. மாமிச உணவுகளான மின், லீவா, முட்டைகள் போன்ற உணவுகளில் வைட்டமின் ‘A’ கிடைக்ககிறது.

கண்புரை வராமல் தடுக்க வைட்டமின் ‘c ‘ சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நம் முகத்திற்க்கு அழகை சேர்க்கும் கண்களை காக்கும் வழிமுறைகள் கீழ்கண்டவாறு காண்போம்:

  • வாரத்திற்கு 3 முறை, இரவில் படுக்கும் போது 2 துளி விளக்கெண்ணெயை கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்களில் மீது சிறிய நேரம் மசாஜ் செய்தால் , கண்கள் குளிர்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
  • மாதத்திற்க்கு 4 முறை இரவில் படுப்பதற்கு முன் 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விடுவதன் மூலம் கண் தெளிவாகயும் , பளிச்சென்றும் தெரியும்.
  • கண்களை சுற்றி உள்ள கருவலையங்கள் நீங்க பாலுடன் அரைத்த பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கண்களை சுற்றி தடவி வர வேண்டும்.

  • தினமும் கண்களை மேல், கீழ் பக்கவாட்டுகளில் அசைத்து தினமும் கண் பயிற்சி செய்தால் கண் பார்வை மேம்படும்.
  • சோர்வு மற்றும் கருவளைங்கள் நீங்க தினமும் கண்களின் மீது வெள்ளரிக்காய் துண்டுகளை 10 நிமிடம் வைத்து வர வேண்டும்.

  • சக்கரவல்லிகிழங்கு அல்லது உருளைக்கிழங்களை அரைத்து சாறை கண்கள் மீது 10 நிமிடம் மசாஜ் செய்தால் கண்களில் இருக்கும் கருவளைங்கள் நீங்கும்.
  • கண்களில் இருக்கும் கருவளைக்களை நீங்க கிரீன் டீ சிறந்ததாகும். கிருமி நாசினி தன்மைக் கொண்டு உள்ளதாள் கருவளைக்களை போக்க கிரீன் டீ உதவுகிறது.

See also  புதுசேரியில் ஆட்சி கவிழ்த்தது