• ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை முகத்தில் தடவிய பிறகு 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவிய பிறகு 5 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
  • முகத்தில் உள்ள எண்ணெய் தேவையற்ற முடிகளை அகற்ற எலுமிச்சை சாரை அடிக்கடி முகத்தில் தடவினால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
  • வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழமும் , தேனும் கலந்து முகத்தில் தடவி வர சருமம் மிருதுவாக மாறும் இது மற்றும் இல்லாமல் எண்ணெய் பசை உள்ள முகத்திலும் தடவி வந்தால் சருமம் பொலிவு பெறும்.
  • முகக்கருமை நீங்க 2 டீஸ்புன் சக்கரை , கற்றாழை ஜெல் 1 டீஸ்புன் , பால் 2 டிஸ்புன் , மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
  • பச்சை பயிறு வெளில் காயவைத்து அரைத்து பொடியாக்கி முகம் கழுவும் போது அதை தேய்த்து முகம் கழுவி வர முகம் மிருதுவாகயும்,பொலிவாகயும் முகபரு வராமலும் இருக்கும்.
  • மஞ்சள் தேய்த்து முகத்திற்கு தினமும் குளித்து வந்தால் சருமம் சுருக்கம் வராமல் இருக்கும்.
  • குளிக்கும் தண்ணீரில் 3 அல்லது 4 சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு குளித்து வந்தால் வறண்ட சருமம் ட்ரய் ஆகாமல் இருக்கும்.
See also  உடல் ஆரோக்கியத்தை காக்கும் இஞ்சி தேநீர் செய்முறையை பார்ப்போம்