• தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில்,மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை குறித்து தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுயுள்ளது.
  • தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை காலை 7மணி முதல் மாலை 7மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
  • இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தகவல் சீட்டையும் அல்லது 11அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் முகக்கவசத்துடன் செல்லவேண்டும்.
  • தமிழகத்தில் ஓவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூகஇடைவெளிக்கான வட்டம் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வரிசையாக நிற்கவேண்டும்.
  • பிறகு தங்களுக்கான வாய்ப்பு வரும்போது உள்ளே செல்ல வேண்டும். அங்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் 4 பேர் இருப்பார்கள்.
  • மேலும் அங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அலுவலகரிடம் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் தொகுதி இருக்கும்.
  • முதல் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டுள்ள பெயர், வார்டு எண் போன்ற தகவல்களைக் கூற வேண்டும். அவர் அதை தன்னிடம் இருக்கும் பட்டியலுடன் சரிபார்ப்பார்.
  • உங்கள் பெயர் இருக்கும்பட்சத்தில் அதை சத்தமாக வசித்து, பின் அதை வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்ப்பார்கள்.
  • அதைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
  • உங்கள் பெயரை சரிபார்த்து டிக் செய்துவிட்டு 2-ம் அலுவலரிடம் உங்களை முதல் அலுவலர் அனுப்பி வைப்பார்.
  • அங்குள்ள மேஜையில் உங்களின் இடது கையை வைக்க வேண்டும். உங்களின் இடது கை ஆள்காட்டி விரலின் நகத்தையும், தோலையும் இணைத்தாற்போல் அங்குள்ள அலுவலர் மை வைப்பார்.
  • அதை துடைக்காமல், சில நொடி நன்றாக காயவிடவும். பின்னர் உங்களிடம் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் ஆவணம் ஒன்றில் உங்களின் கையெழுத்தைப் அங்குள்ள அலுவலர் பெறுவார்.
  • பின்னர் 3-ம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அந்த சீட்டை பெற்றுக்கொண்டு உங்களின் விரலில் மை இருப்பதை உறுதி செய்வார். கொரோனா பரவல் காரணமாக வலது கைக்கான கையுறையை அவர் வழங்குவார்.
  • அதை கையில் அணிந்துக்கொண்டு 4-ம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் நீங்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் செய்து வைப்பார்.
  • உடனே நீங்கள் அட்டைப்பெட்டிகளால் மறைக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். தயார் நிலையில் அங்கு எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரமும், அதன் அருகே விவிபேட் என்ற நீங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரமும் வைக்கப்பட்டு இருக்கும்.
  • உங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயருக்கு நேராக நீல நிற பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே இருக்கும் சிவப்பு விளக்கு எரிவதோடு, பீப் சத்தமும் கேட்கும்.
  • அப்போது அருகில் உள்ள எந்திரத்தில் கண்ணாடியாலான சிறிய திரையின் பின்புறம் ஒரு துண்டு தாள் அச்சாகி வரும். அதில் நீங்கள் ஓட்டளித்த சின்னம், எண், பெயர் காணப்படும். இது 7 விநாடிகள் நீடிக்கும்.
  • பின்னர் அது எந்திரத்திற்குள் விழுந்துவிடும். உங்கள் வாக்கு தகுதியான வேட்பாளருக்கு சென்று சேர்ந்ததை இதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
See also  வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துகொண்டவர்கள் கவலைப்பட வேண்டாம் - அரசு மருத்துவ ஆலோசகர்