ஐடிஐ ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் வேலை!

ஹைலைட்ஸ்:

  • சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
  • மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை காக்க, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட்ட உள்ளது. இந்த ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழக்கிறார்கள்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு, கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக 2018-19ம் ஆண்டுகளில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் ஃபிட்டர் பயிற்சி முடித்து, தற்போது வேலையில் இல்லாத நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு ஐடிஐ பணியமர்த்தும் அலுவலர் ரமேஷ்குமார் இதைபற்றி கூறும்போது, “ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க, தொழில்நுட்ப உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். 2018-19-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐ-களில் ஃபிட்டர் பயிற்சியை நிறைவு செய்து, வேலையில் இல்லாத நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அரசு சார்பில் பயிற்சியாளர்களின் விவரங்களை கேட்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை அறிய 9442178340, 9095905006 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். இது முழுக்க முழுக்க அரசு வேலை என்பது குறிப்பிடத்தக்கது ” என்றார்.

0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…