முருகப்பெருமானை வழிபடும் சிறந்த பாடல்களில் ஒன்று கந்த குரு கவசம்…. ஸ்கந்த பகவானின் சிறந்த பக்தரான ஸ்ரீ சந்தானநாத ஸ்வாமிகளால் இந்தப் பெரிய கவசம் எழுதப்பட்டது.
| கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே |
| முஷிக வாகனனே மூலப் பொருளோனே |
| ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே |
| திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் |
| சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) |
| சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் |
| கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் |
| அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. |
| செய்யுள் |
| ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் |
| சரவணபவ குகா சரணம் சரணம் …… (10) |
| குருகுகா சரணம் குருபரா சரணம் |
| சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் |
| தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே |
| ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே |
| தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… (15) |
| அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் |
| அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே |
| அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் |
| தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா |
| ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… (20) |
| காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா |
| போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா |
| போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி |
| போற்றி போற்றி முருகா போற்றி |
| அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் …… (25) |
| தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் |
| ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் |
| சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை |
| அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் |
| திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே …… (30) |
| ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண |
| அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய் |
| அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே |
| வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய் |
| வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே …… (35) |
| தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே |
| திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா |
| பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய் |
| திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய் |
| செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… (40) |
| அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே |
| அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா |
| திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும் |
| திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் |
| எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை …… (45) |
| பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் |
| எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே |
| எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ |
| என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் |
| திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா …… (50) |
| அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய் |
| திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா |
| ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய் |
| செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் |
| சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் …… (55) |
| குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா |
| குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர் |
| பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா |
| பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா |
| விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா …… (60) |
| வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே |
| வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர் |
| கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய் |
| காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர் |
| மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் …… (65) |
| கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் |
| குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர் |
| வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர் |
| வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர் |
| ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் …… (70) |
| ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர் |
| அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் |
| அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய் |
| பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு |
| பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …… (75) |
| அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே |
| படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே |
| உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் |
| உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் |
| அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …… (80) |
| அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் |
| அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் |
| சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் |
| வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ |
| யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… (85) |
| யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ |
| உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே |
| சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா |
| அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய் |
| நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் …… (90) |
| பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் |
| உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய் |
| யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ |
| முக்திக்கு வித்தான முருகா கந்தா |
| சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா …… (95) |
| ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா |
| ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய் |
| தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய் |
| சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய் |
| பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ …… (100) |
| ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ |
| அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய் |
| உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா |
| தேவாதி தேவா சிவகுரோ வா வா வா |
| வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா …… (105) |
| காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய் |
| வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே |
| மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய் |
| அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன் |
| அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் …… (110) |
| உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள் |
| அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய் |
| வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம் |
| உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன் |
| அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா …… (115) |
| அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு |
| சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு |
| சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு |
| அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு |
| அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு …… (120) |
| அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள் |
| ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா |
| தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து |
| நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து |
| பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் …… (125) |
| அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய் |
| அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ |
| சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள |
| சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய் |
| சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… (130) |
| சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே |
| சிவசத் குருநாதா சிவசத் குருநாதா |
| ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய் |
| தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு |
| திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் …… (135) |
| சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு |
| கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும் |
| தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும் |
| தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும் |
| தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் …… (140) |
| மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய் |
| வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய் |
| வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் |
| வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே |
| பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் …… (145) |
| என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் |
| நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் |
| புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் |
| கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும் |
| நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் …… (150) |
| செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும் |
| கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும் |
| உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும் |
| நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும் |
| பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் …… (155) |
| கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும் |
| தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும் |
| கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும் |
| மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும் |
| மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் …… (160) |
| ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும் |
| உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும் |
| நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு |
| இடுப்பை முழங்காலை இணையான கால்களையும் |
| புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே …… (165) |
| உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய் |
| தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும் |
| அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர் |
| என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும் |
| முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் …… (170) |
| பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே |
| ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும் |
| க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும் |
| ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா |
| ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி …… (175) |
| ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா |
| முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால் |
| மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம் |
| முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம் |
| முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா …… (180) |
| ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே |
| இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு |
| முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா |
| காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா |
| சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… (185) |
| தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான் |
| ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே |
| முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா |
| அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில் |
| எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் …… (190) |
| முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும் |
| பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ |
| கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா |
| கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே |
| ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே …… (195) |
| வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே |
| வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம் |
| சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான் |
| அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே |
| அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் …… (200) |
| சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான் |
| நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன் |
| மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ |
| வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ |
| பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா …… (205) |
| பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான் |
| பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ |
| பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே |
| பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய் |
| திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் …… (210) |
| பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய் |
| ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ |
| குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய் |
| கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே |
| ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே …… (215) |
| பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய் |
| பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய் |
| தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய் |
| எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய் |
| ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… (220) |
| சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே |
| சரவண பவனே சரவண பவனே |
| உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன் |
| உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா |
| என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் …… (225) |
| சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய் |
| இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் |
| இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான் |
| மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான் |
| ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே …… (230) |
| சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம் |
| காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய் |
| சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய் |
| நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய் |
| திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே …… (235) |
| திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே |
| திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய் |
| நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில் |
| நித்யானந்தமே நின்னுரு வாகையினால் |
| அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் …… (240) |
| ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள் |
| ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள் |
| மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய் |
| வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய் |
| தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் …… (245) |
| துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய் |
| பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய் |
| இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய் |
| ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய் |
| அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா …… (250) |
| மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய் |
| கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே |
| ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை |
| இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ |
| என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே …… (255) |
| அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா |
| வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ |
| அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே |
| சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய் |
| ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ …… (260) |
| ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய் |
| அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் |
| அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா |
| அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு |
| அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் …… (265) |
| உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே |
| உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் |
| எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ |
| அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் |
| அன்பே சிவமும் அன்பே சக்தியும் …… (270) |
| அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும் |
| அன்பே தேவரும் அன்பே மனிதரும் |
| அன்பே நீயும் அன்பே நானும் |
| அன்பே சத்தியம் அன்பே நித்தியம் |
| அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் …… (275) |
| அன்பே மெளனம் அன்பே மோக்ஷம் |
| அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய் |
| அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய் |
| எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா |
| அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் …… (280) |
| ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண் |
| முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே |
| ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய் |
| ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு |
| இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு …… (285) |
| எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய் |
| முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே |
| நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ |
| உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன் |
| நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் …… (290) |
| விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே |
| நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன் |
| ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய் |
| சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் |
| சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா …… (295) |
| ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும் |
| மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும் |
| கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ |
| கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே |
| கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா …… (300) |
| கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ |
| மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ |
| சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே |
| சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே |
| பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் …… (305) |
| புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ |
| கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா |
| கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே |
| கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே |
| உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் …… (310) |
| ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
| நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும் |
| பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள் |
| கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய் |
| சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் …… (315) |
| கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில் |
| ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய் |
| அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ |
| அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய் |
| சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே …… (320) |
| பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா |
| பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய் |
| மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ |
| சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன் |
| ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா …… (325) |
| சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா |
| பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ |
| திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ |
| குமரா முருகா குருகுகா வேலவனே |
| அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை …… (330) |
| கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான் |
| ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ |
| ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய் |
| போகருக்கருள் செய்த புவன சுந்தரனே |
| தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா …… (335) |
| ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே |
| தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே |
| ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே |
| கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ |
| ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் …… (340) |
| உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன் |
| கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே |
| கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும் |
| புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை |
| திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக …… (345) |
| புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள் |
| நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும் |
| நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம் |
| முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன் |
| உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் …… (350) |
| அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா |
| முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா |
| அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா |
| அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன் |
| ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் …… (355) |
| முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு |
| ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச் |
| சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர் |
| சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா |
| வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ …… (360) |
| சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய் |
| சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன் |
| சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா |
| சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல |
| ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு …… (365) |
| சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ |
| சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு |
| அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன் |
| திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான் |
| ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ …… (370) |
| பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும் |
| பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு |
| இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர் |
| முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர் |
| அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா …… (375) |
| சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா |
| கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே |
| பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே |
| கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய் |
| கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் …… (380) |
| கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே |
| சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ |
| ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு |
| அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும் |
| ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் …… (385) |
| வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன் |
| பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன் |
| சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே |
| ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல் |
| கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் …… (390) |
| முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும் |
| அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும் |
| ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன் |
| கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை |
| சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் …… (395) |
| பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும் |
| கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன் |
| பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல் |
| திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று |
| காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் …… (400) |
| ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ |
| கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே |
| உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான |
| இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை |
| துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் …… (405) |
| இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும் |
| பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து |
| காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே |
| கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை |
| இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் …… (410) |
| தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள் |
| போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய் |
| ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும் |
| அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும் |
| ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் …… (415) |
| உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன் |
| தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி |
| எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான் |
| ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து |
| தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே …… (420) |
| கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே |
| கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே |
| கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை |
| பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின் |
| ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் …… (425) |
| ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும் |
| இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும் |
| முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு |
| நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர் |
| ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று …… (430) |
| ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர் |
| ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும் |
| எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும் |
| ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும் |
| பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே …… (435) |
| கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக் |
| கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால் |
| முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான் |
| நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும் |
| கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் …… (440) |
| கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி |
| உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன் |
| சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும் |
| கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே |
| கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் …… (445) |
| கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப் |
| பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். …… (447) |
