விஜய் சேதுபதியின் புதிய படத்தில் சிம்பு கைகோர்த்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர்,லாபம், மாமனிதன் ஆகிய திரைப் படங்கள் வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

மேலும் விவேக், மோகன்ராஜா, மகிழ்திருமேனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

தற்போது ‘முருகா’ என்ற பாடல் இத்திரைப்படத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகா என்ற பாடலை நடிகர் சிம்புதான் பாடியுள்ளார். இதன் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் சிம்பு இணைந்துள்ளார்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியும் , சிம்புயும் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ‘ செக்க சிவந்த வானம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

See also  வடிவேலு மீண்டும் நாய் சேகர் வேடத்தில் நடிக்கயுள்ளார்.

Categorized in: