28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற தினம்

2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது. மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைத் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி களமிறங்கி 50 ஓவர்கள் முடிவில் 276/4 ரன்கள் எடுத்தது. முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தனே 103* (88) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இலக்கைத் அணியை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் விரேந்திர சேவாக் (0), சச்சின் டெண்டுல்கர் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்து கவுதம் கம்பீர், விராட் கோலி (35) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 83 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து கவுதம் கம்பீர், மகேந்திரசிங் தோனி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 109 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர். மகேந்திரசிங் தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடிவுக்கு கொண்டு வந்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.

சிறப்பாக விளையாடி வந்த கவுதம் கம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 42ஆவது ஓவரின்போது 97 (122) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 91 (79) ரன்களுடன் கடைசிவரைக் ஆட்டகளத்தில் இருந்தார். ஆட்டநாயகனுக்கான விருது மகேந்திரசிங் தோனிக்கு வழங்கப்பட்டது.

 

0 Shares:
You May Also Like
Read More

தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்

ஒலிம்பிக் தொடரை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒலிம்பிக் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள…
Read More 1

எளிதான தமிழ் விடுகதைகள்

பழங்கால நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சூப்பர் ஹீரோ சாகாக்களின் அடித்தளமாக புதிர்கள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் புராணக் கதாநாயகர்களிடம்…
GG vs DC WPL 2025 Match 17
Read More

GG vs DC WPL 2025 Match 17 Result: நேற்றைய WPL போட்டியில் யார் வென்றார்கள்? ஸ்கோர்கள், முக்கிய நிகழ்வுகள் & விருது பெற்றவர்கள்

ஹார்லின் டியோல் அபாரமாக ஆடி, அரைசதத்துடன் அபார இன்னிங்ஸ் வெளிப்படுத்தியதால், குஜராத் ஜயன்ட்ஸ் (GG) டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்…
Read More

இன்று அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய…
Olympic Athletes
Read More

வெற்றிபெற்ற வீரர்கள் தங்களது ஒலிம்பிக் பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள்?

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைக் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் பெலப்ஸ், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ்…