பெற்றோர் தங்கள் குழந்தைகளை தேர்வு மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி

பிரதமர் மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும், காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கினார்.

ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா” எனும் தலைப்பில், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 81 நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்று பிரதமருடன் உரையாடினார்கள்.

மாணவர்கள் தேர்வுகளை எண்ணி பயப்படகூடாது எனவும், மாணவர்கள் அன்றாடம் படித்து வந்தால், தேர்வு எனும் மனஅழுத்ததை தவிர்க்க முடியும் என்றும் பிரமதர் மோடி கூறினார்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும், உங்கள் பிள்ளைகளிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும், பிரதமர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு வீட்டில் ஒரு ஆசிரியராகவும் விளங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…