Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
national awards scaled

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது

  • நேற்று மாலை சினிமா துறைக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் சிறந்த தமிழ் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ் தேர்வு செயப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.
  • ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக இரண்டு விருதுகள் பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி. என்கிற ‘கருப்புதுரை’ படத்திற்காக நாக விஷாலுக்கு கிடைத்துள்ளது.
  • தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருந்த கங்கை அமரன், நான் விருதுகள் கிடைக்க போராடவில்லை, அவர்களாகவே தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், அசுரனுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் கொடுத்துள்ளார்கள் என்று கூறினார்.
  • இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பெரும் மகிழச்சியில் இருக்கிறார்கள்.
  • இந்த முறை தமிழ் திரையுலகிற்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு விருதுகளுக்கான நடுவர் குழுவில் இயக்குநரும், இசையமைப்பாளரும், பாடல் ஆசிரியருமான கங்கை அமரன் இருந்தார்.
  • இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதை குறித்து கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நாங்கள் சுமார் 105 படம் முதல் 106 படங்கள் வரை பார்த்தோம். பல்வேறு மொழி படங்கள் போட்டியில் இருந்ததால் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது என்றார்.
  • இம்முறை தமிழ் சினிமாவுக்கு அதிக விருதுகள் கிடைத்திருப்பதிற்கு பெரு மகிழ்ச்சிஅடைகிறேன். தமிழ் சினிமாவுக்கு 7 முதல் 8 விருதுகள் கிடைத்துள்ளது. நான் எதற்காகவும் போராடவில்லை. நடுவர் குழுவை சேர்ந்தவர்கள் தான் அசுரனையும், தனுஷையும் தேர்வு செய்தார்கள்.
  • மேலும் ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் அவர்கள் அனைத்து பிரிவுகளிலும் சிறந்தவராக இருந்தார் அதனால் எங்களுக்கு எந்த பிரிவில் விருது வழங்குவது என்று தெரியவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.
  • ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபனே நடித்ததுடன்,ஸ்க்ரிப்ட் எழுதி, பல்வேறு விஷயங்களையும் செய்து இருக்கிறார். பார்த்திபன் அவர்கள் அனைத்து பிரிவுகளிலும் சிறந்தவராக இருக்கிறார் என்று பார்த்திபனுக்கு விருது குறிப்பிட்டார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார் கங்கை அமரன்.
  • ஆடுகளம் படத்தை அடுத்து தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்து குறிப்பிடத்தக்கது. இதை தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.