வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.11ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என்று சட்டமன்ற தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை வைத்து தனது வாக்குகை பதிவு செய்யலாம்

11 ஆவணங்கள்

  • ஆதார் கார்டு
  • பான் கார்டு
  • வங்கி கணக்கு புத்தகம்
  • அஞ்சலக கணக்கு புத்தகம்
  • ஸ்மார்ட் கார்டு
  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் அட்டை
  • மருத்துவ காப்பீடு
  • ஓட்டுநர் உரிமம்
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை
  • இந்திய கடவுச்சீட்டு
  • பாராளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினருகளுக்கான அலுவலக அட்டை

    வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் 20A சட்டத்தின் கீழ் அவரகளது கடவுச்சீட்டை மட்டுமே பயன்படுத்தி வாக்களிக்க இயலும். காலை 7மணி முதல் மாலை 7மணி வரை மட்டுமே மக்கள் தனது வாக்குகளை பதிவு செய்ய இயலும். வாக்குச்சாவடிகளில் பூத் முகவர்கள் தனது கைபேசியை கொண்டுவர அனுமதி இல்லை. கட்டாயமாக அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும். தெர்மல் ஸ்கேன் பரிசோதனை மூலம் சோதித்த பின் வாக்காளர் கையுறையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவலை தெரிவித்துள்ளனர் .

See also  தளபதி 65 பொங்கல் 2022 இல் வெளியிடப்பட உள்ளது