Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

 2-வது டெஸ்ட் போட்டி டாஸ்யில் வென்ற இந்திய அணி

  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 50 விழுக்காடு ரசிகர்களுடன் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்துபெற்று வருகிறது.

டாஸ்யில் வென்ற இந்திய அணி

  • உலக சாம்பியன்ஷிப்யில் தகுதி பெற இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்திய அணி இருக்கிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
  • அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு, இவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
  • இதனையடுத்து டாஸ்யில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து தொடர்ந்தது விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்கள். இதில் சுப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமலே பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
  • ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாகவும் ,அதிரடியாகவும் விளையாடி அரை சதமடித்தார். புஜாரா களத்தில் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
  • அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
Previous Post
vikatan 2021 02 1373175b ec83 4985 bc71 0b2f281ca831 WhatsApp Image 2021 02 12 at 16 51 31

தமிழ்நாடு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து

Next Post
indian bank

 இந்தியன் வங்கி சேவையில் இடையூறு 

Advertisement