• சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 50 விழுக்காடு ரசிகர்களுடன் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்துபெற்று வருகிறது.

டாஸ்யில் வென்ற இந்திய அணி

  • உலக சாம்பியன்ஷிப்யில் தகுதி பெற இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்திய அணி இருக்கிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
  • அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு, இவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
  • இதனையடுத்து டாஸ்யில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து தொடர்ந்தது விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்கள். இதில் சுப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமலே பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
  • ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாகவும் ,அதிரடியாகவும் விளையாடி அரை சதமடித்தார். புஜாரா களத்தில் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
  • அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
See also  முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்