Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

ஆத்திசூடி aathisudi in tamil with meaning

ஆத்திச்சூடி விளக்கம்

1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்
கோபம் தணிய வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.

Advertisement

4. ஈவது விலக்கேல்
தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே

5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்
முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்
கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி
யாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.

9. ஐயம் இட்டு உண்
யாசிப்பவருக்கு(ஊனமுற்றோர்) கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு
உலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.

11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.

13. அஃகம் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே

14. கண்டொன்று சொல்லேல்.
பொய் சாட்சி சொல்லாதே.

15. ஙப் போல் வளை.
‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க ‘ஙா’ வரிசை எழுத்துக்களை தழுவுகிறதோ! அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

16. சனி நீராடு.
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு.

17. ஞயம்பட உரை.
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.
தேவைக்கேற்ப வீட்டை கட்டிக்கொள்.

19. இணக்கம் அறிந்து இணங்கு.
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்.

20. தந்தை தாய்ப் பேண்.
உன் தந்தையையும் தாயையும் இறுதிக்காலம் வரை அன்புடன் இருந்து காப்பாற்று.

21. நன்றி மறவேல்.
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறந்து விடாதே.

22. பருவத்தே பயிர் செய்.
ஒரு செயலை செய்யும்பொழுது அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தை ஏமாற்றி கவர்ந்து அதன் மூலம் வாழாதே.

24. இயல்பு அலாதன செய்யேல்.
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25. அரவம் ஆட்டேல்.
பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26. இலவம் பஞ்சில் துயில்.
‘இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27. வஞ்சகம் பேசேல்.
உண்மைக்கு புறம்பான கவர்ச்சிகரமான சொற்களை பேசாதே.

28. அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களை செய்யாதே.

29. இளமையில் கல்.
இளம்பருவத்திலே கற்க வேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.

30. அறனை மறவேல்.
தருமத்தை எப்பொழுதும் மனதில் நினைக்கவேண்டும்.

31. அனந்தல் ஆடேல்.
மிகுதியாக தூங்காதே

32. கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசாதே.

33. காப்பது விரதம்
தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்.

34. கிழமை பட வாழ்
பிறருக்கு நன்மை செய்து வாழ்.

35. கீழ்மை அகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய குணங்களை கைவிடாதே.

37. கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பழகி பின் அவரை விட்டு பிரியாதே.

38. கெடுப்ப தொழி
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.

40. கைவினை கரவேல்
தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு.

43. கௌவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

44. சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்.

45. சான்றோர் இனத்து இரு
அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.46. சித்திரம் பேசேல்
பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே.

47. சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

49. சூது விரும்பேல்
ஒருபொழுதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.

 

Previous Post
payaru

பயிறு வகைகள் payaru vagaigal

Next Post
மகேந்திரா பொருத்தம்

மகேந்திரா பொருத்தம் mahendra porutham meaning in tamil

Advertisement