தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில், வேதியியலாளர், எலக்ட்ரீஷியன், தொழில்நுட்ப உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி எம்பிஏ, பொறியியல், பட்டதாரி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு(Written Exam) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியின் பெயர் : வேதியியலாளர், எலக்ட்ரீஷியன், தொழில்நுட்ப உதவியாளர் கல்வித் தகுதி : எம்பிஏ, பொறியியல், பட்டதாரி பணியிடம் : தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு(Written Exam) மொத்த காலிப்பணியிடங்கள் : 5 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.07.2021 மேலும் முழு விவரங்களை : https://tnsalt.com/tnsalt-new/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.…
Author: gpkumar
படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கிட சுயவேலை வாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தொழில் நிறுவனங்களின் நலனை மேம்படுத்துவது குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிதி ஆண்டில் தொழில் துறை வரவு செலவு திட்ட முதலீடு மானிய ஒதுக்கீட்டை ஒரு மாதத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமை இலக்குகளை தவறாமல் எய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வற்புறுத்தினர். மேலும் சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவதுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார். தமிழகம் தொழில் துறையில் நாட்டின் முன்னோடி மாநிலமாக விளங்க தொழில் துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் தகவல் தொழில் நுட்பவியல் துறை ஆய்வு…
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் அதிகாரபூர்வ இணையதளத்தில் Fitter காலிப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 10th என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(interview ) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் பணியின் பெயர் : Fitter கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு பணியிடம் : தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மொத்த காலிப்பணியிடங்கள் : 10 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் அதிகாரபூர்வ இணையதளம்: www.tnstc.in விண்ணப்பிக்க கடைசி தேதி : விரைவில் அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு வெளியான தேதி: 28 ஜூன் 2021 மேலும் முழு விவரங்களை அறிய : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60d808778efcd73d0720cd65 என்ற லிங்கை கிளிக்…
உங்கள் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் அறிய வங்கிகளுக்குச் செல்வது அல்லது ஏடிஎம்களில் நிற்பது பலருக்கு மிகவும் கடினம். இந்த கடினத்தை போக்க உங்கள் வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணை நீங்கள் பதிவுசெய்தால் போதும் ஒரு மிஸ்ட்காலில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸை உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கடந்த சில ஆண்டுகளாக அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளில் உள்ளது. இப்போது அனைத்து வங்கிகளின் எண்களை பற்றி தெரிந்து கொள்வோம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09223766666 என்ற தொலைபேசி எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும். கரூர் வைஸ்யா வங்கி கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09266292666 என்ற தொலைபேசி எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும். ஐசிஐசிஐ வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கையாளர்கள்…
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்புகளில் 25 % ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகள் ஜூன் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் தங்களின் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்…
TVS மோட்டார் நிறுவனத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில், தொழில்நுட்ப நிபுணர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 8th , 12th, ITI, Diploma என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக ஓசூர், கிருஷ்ணகிரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : TVS மோட்டார் நிறுவனம் பணியின் பெயர் : தொழில்நுட்ப நிபுணர் கல்வித்தகுதி : 8th,12th, ITI, Diploma பணியிடம் : ஓசூர், கிருஷ்ணகிரி தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.07.2021 மேலும் முழு விவரங்களை : https://alljobopenings.in/wp-content/uploads/2021/07/tvs.jpeg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Friendship Folk Song | Harbhajan Singh, Arjun, Losliya, J Sathish Kumar | D.M.UdhayaKumar. Watch #AdichuParakkaviduma Lyrical Video Song from Friendship New Tamil Movie ft. Harbhajan Singh, Arjun, Losliya Mariyanesan, Sathish, Sung by Sarath Santhosh.
வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அதனால் இதில் உள்ள இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் இந்த இழப்பு ஏற்படுவதில்லை. நாம் அன்றாட உணவில் சர்க்கரையை தவிர்த்து வெல்லம் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இது உடல் ஆரோக்கியத்தை காக்கும். நமது முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தை தான் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெல்லத்தினை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் அதிக இரும்பு சத்து உள்ளதால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கும். ஒவ்வாமையால் வரும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதமாகும். வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை, ஆன்டி அலர்ஜிக் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடையும். மேலும் வெல்லத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது…
Sivakumar Pondati Official Video Song | Sivakumarin Sabadham | Hiphop Tamizha
ஊரக தபால் ஆயுள் காப்பீடு, தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு வரும் 9ம் தேதி சென்னை தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் கோட்டம், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் நடத்திய பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். வரும் 9ம் தேதியன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் இருக்க வேண்டும். காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு…
ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன்பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தை சிவா இயக்கி, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு, இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஆனால்,கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தீவிரத்துக்கு முன்பாகவே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொல்கத்தாவில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இன்னும் 11 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.…
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 4 நாள்களுக்கு…
அதிக உடல் எடை உள்ளவர்கள் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு எவ்வளவு முயன்றாலும் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று செல்வோருக்காகவே அறிவியலாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த கருவி, வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்கவிடாமல் தடுக்கும். இந்த கருவி பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே டார்ச்சர் டிவைஸ் என்றே பெயர் பெற்றுவிட்டது. உடல் எடைக் குறைப்புக்காக நியூசிலாந்து நாட்டின் ஓட்டாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்த புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளது. காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த கருவியை பற்கள் இடையே பொறுத்திக் கொள்ள வேண்டும். இந்த கருவியை பற்களுக்கிடையே பொறுத்திக்கொண்டால் வாயை 6 மி.மீ. அளவிற்கு மட்டுமே திறக்க முடியும். இதனால் திட உணவுப் பொருட்கள் உட்கொள்ளவே முடியாது. முழுக்க முழுக்க திரவ உணவுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம்…
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுயுள்ளார். கொரோனா முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் நீதி வழங்குமாறு முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்றுவரை 353 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அழைக்கப்படும் நன்கொடையை கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவமருந்து ஆக்சிஜனை வாங்கவும், கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
