ஜியோ போன் வாங்குறதுக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கவும் மற்றும் மக்களுக்கு மிகவும் பிடித்த ஆப் YouTube ஆகும். ஏராளமான வீடியோக்களை அனைத்து துறைகளில் இருந்து யூடியூப் வழங்குவதன் மூலம் பயனர்களின் அனைத்து வீடியோ தேவைகளையும் YouTube பூர்த்தி செய்கிறது. YouTube ஆப்பை ஜியோபோனில் பதிவிறக்கும் செய்வது எப்படி? YouTube வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன், ஜியோ போன் பயனர்கள் தங்கள் ஜியோ போனில் YouTube ஆப்பை வைத்திருக்க வேண்டும். ஜியோ போன்களில் யூடியூப்பைப் பதிவிறக்க செய்ய, ஜியோஸ்டோர் ஆப்பைத் திறந்து, அதன் வழியாக யூடியூப் ஆப்பைத் தேடவும். பிறகு அதை கண்டுபிடித்து இன்ஸ்டால் விருப்பத்தை கிளிக் பண்ணவும், பின்னர் உங்கள் ஜியோபோனில் குறிப்பிட்ட ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். YouTube ஆப்பைத் திறந்து, நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவைத் தேடவும். இதற்கான வீடியோவை திறந்தது, Search-இல் கிளிக் ஆகும் இடது…
Author: gpkumar
பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு மார்ச் மாதம் 31ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இச்சூழலில் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான வலைத்தளத்தை அதிகமானோர் பயன்படுத்தியதால், இந்த வளையத்தளம் சரிவர இயங்கவில்லை என்கிற புகார்கள் பொதுமக்களிடையே இருந்தது வந்தது. இதனால் மேலும் மூன்று மாத காலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30ம் தேதி வரை ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது ஆல விச தொடங்கியுள்ளது. இதனால் வருமான வரித்துறை தங்களது பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மற்றும் மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதையும் பார்ப்போம். ஆன்லைனில்…
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று சென்னை பிரசாத் லேப்பில் கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாரி செல்வராஜ், ரஜிஷா விஜயன்,சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நடிகை ரஜிஷா விஜயன், கர்ணன் படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நன்றியை தெரிவித்துள்ளார். இந்த இசைவெளியிட்டு விழாவில் நடிகை ரஜிஷா விஜயன் பேசுகையில் கர்ணன் படம் ஒரு பெரிய ஏமோஷனல் படம். நான் மிக பெரிய தயாரிப்பு குழுவுடன் தாணு சார் நடிப்பின் லெஜெண்ட் தனுஷ் சார், சந்தோஷ் நாராயணன், நடராஜன் நட்டி,யுகபாரதி, யோகி பாபு, கௌரி கிஷன், இவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த மாரி…
தமிழக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் சில வேட்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் மாநில அரசு சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் வழங்கப்படும். இந்த முறை அந்த அவகாசம் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைக்குறித்து செய்தியாளர்களிடம் தமிழக…
ரேஷன் அட்டைகளில் திருத்தங்களை செய்வதற்கும், ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்களும் குறைவான கட்டணத்தில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எளிய வழிமுறைகளில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏற்கெனவே பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கல் பரிசுகளையும் வழங்கி வருகிறது. மேலும் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள், ரேஷன் அட்டையில் இணைத்துள்ள கைப்பேசி எண்ணை வைத்து பொங்கல் பரிசுகளை வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு கூறியிருந்தது. அதேபோல் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு பல குழப்பங்களில் இருந்து வருகிறார்கள். மேலும் புதிய ரேஷன் அட்டை வாங்குவதற்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஏமாறியதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் 20 ரூபாய் செலவில் புதிய…
மத்திய அரசின் சிறிய சேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைய ஒரு தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் திறந்து, அதில் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த முதலீடுகளின் அடிப்படையில் நாம் பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டதின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், நம்முடைய முதலீட்டிற்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம் தருகிறது. இந்திய குடிமகன் அனைவரும் தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நமக்கு மாத வருமானம் கிடைக்கும். அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க முடியும். இதற்காக, நாம் ஐடி…
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறார். இந்த புதிய மாற்றங்களில் 75 வயதானவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது மற்றும் TDS உயர்த்துவது , EPF மீதான வரி குறித்து பெரிய அறிவிப்புகளை வெளியிடுவது போன்ற விதிகள் இதில் அடங்கும். ஐந்து முக்கிய விதிகளை பார்ப்போம்: 1. வருங்கால வைப்பு (Provident Fund) மீதான வரி விதிகள் இந்த ஆண்டு 2021 ஏப்ரல் 1 முதல், வருங்கால வைப்பு (PF ) நிதியில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்வதற்கான வட்டி வரி விதிக்கப்படும். மேலும் அதிக பங்களிப்பு செய்வதன் மூலம் அதிக வட்டி சம்பாதிக்க EPF பயன்படுத்தும் மக்கள் அதன் எல்லைக்குள் வருவார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. இந்த மாற்றம் ஊழியர்களின் நலனுக்காக இருக்கும்…
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்றயிறக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது தங்கம் வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளார்கள். நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து இருந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 விலை குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.33,536-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.41 குறைந்து, ரூ.4,192-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,500 ரூபாயாக இருந்தது. இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 1,000 குறைந்து 68,500-ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை ஆகிறது.
தலைநகர் டெல்லியில் அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் அதிகபட்சமாக 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி, ஹரியானா, சண்டிகர், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு தற்போது மார்ச் மாதத்தில் டெல்லியில் 104.18 டிகிரி வெயில் பதிவானது இதுவே முதல்முறை என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின்…
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியது. மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்தது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று தமிழகத்தில் 2,181 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தமிழகத்தில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 833 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உருவாகியிருக்கிறது. மேலும் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 188 பேரும், கோவையில் 180 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,79,473 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை இந்நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை…
வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘23ஆம் புலிகேசி’. இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘24ஆம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது. லைகா நிறுவனம் இணைந்து பழைய படத்தின் அதே கூட்டணியில் இந்த படத்தை உருவாக்க இருந்தது.இதைத்தொடர்ந்து இந்த படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத் தி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுபறித்து கொண்டு இருந்தது. இதனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்தது . இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வடிவேலுவை புதிய படங்களில் ஓப்பந்தம் செய்ய தயக்கம் காட்டினார்கள். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமலிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தலைநகரம்,…
உதவி பொது மேலாளர், துணை பொறியியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்பனி பெயர் : HMT Machine Tools Limited பணியின் விவரம் : Assistant General Manager/Manager (Finance) – 01 சம்பளம்: மாதம் ரூ.14,500-18,700 பணி விவரம்: Dy. Engineer (Corporate Planning) – 01 சம்பளம்: மாதம் ரூ.8,600-14,600 வயது வரம்பு: 01.03.2021 தேதியின் படி, 40 வயது முதல் 44 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: Graduate, Post Graduate, MBA, CA அல்லது ICWA, CMA முடித்தவர்கள். தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.750, மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.500, மேலும் எஸ்டி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.250…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. நேற்று புனேவில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியை அழைத்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோகித் ஷர்மா 37 ரன்கள் எடுத்து ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தவான் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணி, 157 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு பிறகு ஜோடி சேர்ந்த, ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அவர்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த்…
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 290 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 4.52 லட்சத்திற்கும் மேல் நாடு முழுவதிலும் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா பாதிப்பு மாநிலங்ள் அளவில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் மகாராஷ்டிராவில் இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின்…
